இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"தனித்து வா." நாம் விட்டுவிலகி வரவேண்டும் - எப்பொழுதாவது ஒரு முறை அல்ல, ஆனால் அடிக்கடி, தினமும் கூட! நம்பமுடியாத வகையில், இயேசு தம் சீஷர்களை (இன்று, அது நாம் தான்!) அவருடன் அமைதியான இடத்திற்குச் சென்று அவரோடே கூட இளைப்பாறுமாறு அழைக்கிறார். சிறு பிள்ளையை போன்ற ஜெபம் பொருத்தமானது: "இப்போது நான் நித்திரை செய்யும்படி என்னைக் கிடத்தி, என் ஆத்துமாவைக் காப்பாற்றும்படி தேவனை நோக்கி வேண்டிக்கொள்கிறேன்." இது ஒரு நல்ல இரவு நித்திரையை பற்றியது மட்டுமல்ல; இது நம்முடைய கடினமான மற்றும் நிலையற்ற நாட்களின் நடுவில் சிறிது நேரம் எடுத்து கொண்டு அவருடைய கிருபைக்காகவும் , இளைப்பாறவும், புத்துணர்ச்சிக்காகவும் அவருடன் சேர வேண்டும். விரைவான மின்னஞ்சலைப் பார்ப்பதை விட, தேவனுடைய வார்த்தையில் அனுதினமும் நின்று வாசித்து கவனம் செய்வோம்; மற்ற காரியங்களுக்கு விலகி இரட்சகரோடு இளைப்பாரும் நேரமாக இருக்கட்டும். இயேசு இன்னும் நம்மை அழைக்கிறார்: "வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்."

Thoughts on Today's Verse...

"Come away." We do need to withdraw — not once in a while, but often, even daily! Incredibly, Jesus invites his disciples (Today, that's us!) to withdraw with him to a quiet place and rest with him. The little childhood prayer is appropriate: "Now I lay me down to sleep and pray the Lord my soul to keep." Only this isn't just about a good night's sleep; it's about taking time in the middle of our wild and crazy days to join him for a few moments of grace, rest, and refreshment. Let's make these daily stops in God's Word more than quick e-mail viewing; let's let it be a time to withdraw with the Savior and rest. Jesus still beckons us: "Come with me by yourselves to a quiet place and get some rest."

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், இரக்கமுள்ள மேய்ப்பரே, என் ஆத்துமாவை அமைதிப்படுத்துபவரே , உம்முடைய நிலையான கவனிப்பு மற்றும் அன்பான உண்மைத்தன்மைக்காக உமக்கு நன்றி. உம்முடன் இளைப்பாறும் நேரத்தில் நான் மிகவும் ஒழுக்கமாக இருக்க முயற்சிக்கும்போது தயவுசெய்து என் இருதயத்தைத் தொடும்படி கேட்கிறேன் . தயவு செய்து என் ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுங்கள், ஆனால் இன்னும் அதிகமாக, உம் குமாரனும் என் இரட்சகராகிய இயேசுவோடும் நேரத்தைச் செலவிட நான் தனித்து செல்லும்போது தயவுசெய்து என் ஆத்துமாவை மீட்டெடுத்துக்கொள்ளும் , அவருடைய வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy and gentle Shepherd, the one who stills my soul, thank you for your constant care and loving faithfulness. Please touch my heart as I try to be more disciplined in my rest times with you. Please keep my soul, but even more, please restore my soul as I withdraw to spend time with your Son and my Savior Jesus, in whose name I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  மாற்கு-Mark 6 :31

கருத்து