இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை நீங்கள் எதை அடைவதற்காக உழைக்கிறீர்கள்? இது பதவி, பதவி உயர்வு, மற்றவர்கள் நம்மை முக்கியத்தும் பண்ணும்படியான உணர்வு, பாதுகாப்பான வாழ்க்கை முறை, ஓய்வு பெற்றபின் அதற்கான சேமிப்பு அல்லது வேறு எதையாவது முக்கியமானதாக உணர்கிறீர்களா? இவைகளை உங்களிடமிருந்து எடுக்கலாம் அல்லது அதிலிருந்து நீங்கள் அகற்றப்படலாம் என்றால், அது மிகவும் நிரந்தரமானது இல்லை, அல்லவா? இயேசு நமக்குக் கொடுப்பது மட்டுமே உண்மையானது மற்றும் நிரந்தரமானது ஏனென்றால் அது தேவனுடைய கிருபையின் ஈவாக நமக்கு வருகிறது. அப்படியென்றால், "நித்திய ஜீவன் வரை நிலைத்திருக்கும்" ஊழியத்தில் நீங்கள் எவ்வாறு முழுமையாக உங்களை ஒப்புக்கொடுக்க முடியும்?

என்னுடைய ஜெபம்

என் சிந்தனையை சீராக்குங்கள் , அன்பான தேவனே , என் வாழ்க்கையில் நான் எதற்காக உழைக்கிறேன் என்பதை நான் இன்னும் தெளிவாகப் பார்க்க முடியும். நித்தியமான விஷயங்களில் என்னை, "எனது" நேரத்தை மற்றும் "எனது" பணத்தை முதலீடு செய்வதற்கான வழிகளைக் கண்டறிய எனக்கு உதவியருளும் . ஆனால், அன்பான பிதாவே , நான் என்ன செய்கிறேன், எதை உற்பத்தி செய்கிறேன், சாதிக்கிறேன் என்பதில் அல்ல, உம்முடனான எனது உறவில் எனது முக்கியத்துவத்தைக் கண்டறிய உம்முடைய உதவி எனக்குத் தேவைப்படும் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மைத் தேட நான் உறுதியளிக்கும்போது தயவுசெய்து என்னை மன்னித்து பெலப்படுத்துங்கள். உம்முடைய குமாரனும் என் இரட்சகருமான இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து