இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சங்கீதக்காரன் நாம் பயத்துடனும், அதிசயமாகவும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்றும், நாம் இங்கே ஜீவிக்கும் போது தேவன் நமக்கென்று ஒரு தெளிவான திட்டத்தை முன்குறித்து ஆயத்தம்பண்ணியிருக்கிறார் என்றும் நமக்கு நினைப்பூட்டினார். மற்ற உலகத்தாரைப் போலல்லாமல், நாம் முழு மனதுடனே அவருக்காக வாழும்போது அவரது சிருஷ்டிப்பையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறோம்.

என்னுடைய ஜெபம்

எஜமானரே, உம் ஊழியத்தை செய்யும் வாய்ப்புகள் மற்றும் உம்முடைய சித்தம் என் வாழ்க்கையில் வரும்போது அவற்றை அடையாளம் காண எனக்குக் கற்றுக் கொடுங்கள். அவநம்பிக்கையில்லாமல் உமக்காக வாழ விரும்புகிறேன். என் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்வதில் வெட்கப்படாமல் தைரியத்துடன் இருக்க ஜெபிக்கிறேன் . எல்லோரும் பதிலளிப்பதற்காக நான் காத்திருக்கும்போது பொறுமையோடே இருக்க ஜெபிக்கிறேன். கிறிஸ்துவிடம் நெருங்கி வருபவர்களின் பாதுகாப்பிற்காக நான் ஜெபிக்கிறேன். எனக்காக அல்ல, உமது ராஜ்யம் என் வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து