இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வாக்கியம் தேவனின் மகிமையான கிருபையையும், அந்த கிருபையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் நினைப்பூட்டுகிறது. ஜீவனானது ஒரு விலையேறப்பெற்ற ஈவுவாகும் , நமக்கு அறிமுகமானவர்களும், நேசிக்கிரவர்களும் அதைத் இழந்துப்போவது நமக்கு மிகஅதிக மனவருத்தத்தை உண்டாக்கும் . தேவன் தம்முடைய குமாரனின் ஜீவனை நமக்காக கொடுத்தார், அதனால் அவரைக் அறிந்தோமானால் , நாமும் அவருடைய ஜீவனில் பங்குகொள்ள முடியும்.

என்னுடைய ஜெபம்

எல்லா இராஜ்ஜியங்கிகளின் பிதாவே, ஒவ்வொரு மொழியினருக்கும், இனத்தாருக்கும், தேசத்தாருக்கும், மக்களுக்கும் உமது கிருபையைப் விதைக்க செய்யும் விருப்பத்தை உமது மக்களுக்குள் உயிர்த்தெழச் செய்யுங்கள் . இயேசுவை அறியாத உலகத்திடம் தைரியத்துடனும், மனதாழ்மையுடனும் இயேசுவின் நற்செய்தியைப் பேசுவதற்கு உமது பரிசுத்த ஆவியானவரை கொண்டு எங்களைப் பலப்படுத்துங்கள். குமாரனுக்குள் மற்ற யாவரும் ஜீவனை பெற்றுக்கொள்ள எங்களைப் பயன்படுத்துங்கள்! உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து