இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"நாங்கள் உம்முடையவர்கள் !" இதை அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு கூறுகிறார். நாம் அந்நியரோ, ஒதுக்கப்பட்டவரோ, புதிதாய் வந்த தேவனுடைய பிள்ளைகளோ அல்ல. கிருபையினாலே நாம் அவருடைய சொந்தஜனம்! நாம் தேவனுடைய வீட்டில் அங்கமாயிருக்கிறோம் ! அப்போஸ்தலர்களாலும் , தீர்க்கதரிசிகளாலும் இந்த வீட்டின் அஸ்திபாரம் உண்டாயிருக்கிறது.இந்த வீட்டிற்க்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். நாமும்கூட தேவனுடைய பரிசுத்த வீட்டின் அங்கமாயிருப்பது வியப்பாய் இருக்கிறது. நாம் அவருடைய சொந்த ஜனம் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, மலைகளுக்கு மேலாய் உயர்ந்த ஆண்டவராகிய தேவனே, இஸ்ரவேலின் உடன்படிக்கையின் தேவனே, தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கிற உம்முடைய அன்பினால் உமது ஜனங்களை வாக்குத்தத்தங்களினாலும், கிருபையினாலும், எதிர்காலத்தினாலும் ஆசீர்வதித்திருக்கிறீர். என்னை இயேசுவுக்குள்ளாய் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சித்தமைக்காக உமக்கு நன்றி.உம்முடைய வீட்டிலே அடியேனை முக்கிய அங்கமாய் வைத்தமைக்காக உமக்கு நன்றி. உமக்கு மகிமை கொண்டு வரும் காரியங்களில் எனது முக்கியத்துவத்தை நான் சந்தேகித்த நேரங்களுக்காக என்னை மன்னியும். நான் உமக்கும், உமது ஜனங்களுக்கும், உமது வீட்டிற்கும் சொந்தம் என்று உணர்ந்துகொள்ளும்படி எனக்கு எழுப்புதலைத் தாரும். இயேசுவின் நாமத்திலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து