இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் இயேசுவை விசுவாசிக்கிறீர்களா ? நீங்கள் மெய்யாகவே விசுவாசிக்கிறீர்களா ? மேக்ஸ் லுகாடோ பிரேசிலில் உள்ள ரியோவில் தனது ஊழிய பாதையிலிருந்து திரும்பி வந்த சிறிது நேரத்திலேயே, அவர் தனது வேதாகம கோட்பாடு மிகவும் எளிமையானது என்று அவரது நெருங்கிய நண்பர்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டார். மக்களைப் பிரிக்கும் பல பெரிய கடினமான வேதாகமப் பிரச்சனைகளை அவர் கையாளவில்லை. மாறாக தேவன் நம்மை நேசிக்கிறார் என்ற உறுதியான மற்றும் ஆழமான நம்பிக்கைக்கு வந்ததாக மாக்ஸ் கூறினார், மேலும் தேவன், இயேசுவை மெய்யாக இவ்வுலகிற்கு அனுப்புவதன் மூலம் அவர் நம் மத்தியில் வாழவும், நமக்காக மரிக்கவும், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படவும் அதின் மூலம் அந்த அன்பைக் விளங்கச் செய்தார். இது தேவனின் கிரியையாக இருக்கிறது- பிரமிக்கத்தக்க எளிமையான மற்றும் அற்புதமான வல்லமை வாய்ந்தது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே , இயேசு பூமிக்கு வந்தார், மரித்தார் , மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன் . நம்பிக்கையையும் உதவியையும் நாடும் என்னைச் சுற்றியுள்ளவர்களுடன் அந்த நற்செய்தியைக் காட்டவும் பகிரவும் எனக்கு உதவியருளும் . பரிசுத்த ஆவியானவரே, என்னைச் சுற்றிலும் தேடுபவர்களுக்கு என் கண்களைத் திறந்து, அவர்களுடன் இயேசுவைப் பகிர்ந்துகொள்ள எனக்கு தைரியத்தையும் உணர்வையும் தாரும் . பிதாவே , உம்முடைய கிரியைகளில் பங்கு கொள்ள எனக்கு அதிக வாய்ப்பு வேண்டும்; இன்று நான் அதற்கு என்னை அர்ப்பணித்துக்கொள்ள எனக்கு உதவி செய்தருளும் . என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து