இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் பார்க்காததை உங்களால் நம்ப முடியுமா? உணமையாக! எப்படிப்பட்டதான கேள்வி? நாம் கண்களால் பார்க்க முடியாதவற்றை நம்புவதையே நம் வாழ்க்கை சார்ந்துள்ளது - புவி ஈர்ப்பு மற்றும் நாம் சுவாசிக்கும் காற்று போன்றவையாகும் . இயேசுவின் மீதுள்ள நம் விசுவாசம் மற்ற விஷயங்களில் உள்ள நம்பிக்கையைப் போலவே இயல்பாக இருக்க வேண்டும். பிரச்சனை என்னவென்றால், நம் இருதயமானது சில நேரங்களில் பலவீனமாக இருக்கும், மேலும் நம் உலகம் பெரும்பாலும் சந்தேகத்திற்குரியது. சில சமயங்களில், இயேசுவைப் போல் பரிசுத்தமாகவும் முழுமையாகவும் எவரும் நம்மை நேசிப்பார்கள் என்று நம்புவது கடினம். " இது உண்மையிலேயே மிகவும் நன்றாகத் தோன்றினால், ஆம் " என்று எங்கள் அனுபவம் கூறுகிறது. உலகத்தின் சந்தேகம், தேவன் நம்மிடம் இருந்து எதிநோக்கும் பதிலை மழுங்கடித்து முறிக்கும்படி விரும்புகிறது: இயேசுவுக்குள்ளாய் நாம் "சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறோம் ". உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நம்பிக்கையிலே சந்தோஷம் மற்றும் கொடூரமான சந்தேகம் ஆகிய இரண்டையும் என் வாழ்க்கையில் ருசிபார்திருக்கிறேன். ஆனால் நான் நம்பிக்கையிலே சந்தோஷத்தை விரும்புகிறேன்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , என் கண்களில் இருந்து ஒவ்வொரு துளி கண்ணீரையும் துடைத்து, நான் நேசிப்பவர்களுக்கும், என்னுடைய நற்பண்புகளால் மட்டுமே அறிந்தவர்களுக்கும் என்னை மீண்டும் அறிமுகப்படுத்தியருளும் - உம்முடைய சமூகத்திலே தங்கியிருப்பது எப்படி இருக்கும் என்று நான் யோசித்து பார்க்கும்போது என் இருதயம் மகிழ்ச்சியினால் நிரம்புகிறது. தயவு செய்து அந்த எதிர்பார்ப்பு உணர்வு ஒருபோதும் தொய்ந்துபோக அனுமதிக்காதீர்கள், மேலும் என் வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும் அந்த நம்பிக்கையை என் இருதயத்தில் குன்றிப்போக விடாதீர்கள். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து