இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் காலியான கல்லறையைப் பற்றிய பெரிய சத்தியம் என்னவென்றால், அவர் உயிர்த்தெழுந்தார் என்பது மட்டுமல்ல, அவர் என்றென்றும் ஜீவிக்கிறார் என்பதே! மரணத்தின் மீதான அவரது வெற்றி ஒரு குறுகிய காலம் மாத்திரம் அல்ல, அதுவே . அவர் திரும்பி வந்து நம்மை அவர் ஆயத்தம் செய்திருக்கும் வீட்டிற்கு அழைத்து கொண்டுபோகும் வரை நமக்காக பரிந்து பேசுவதற்காக அவர் இப்போதும் ஜீவிக்கிறார் . நம்முடைய ஜீவன் அவருக்குள் மறைக்கப்பட்டிருக்கிறது ஆகவே ஒருவனும் ஒருக்காலும் எதுவும் நம்மை பிரிக்கமாட்டது . அவர் மறுபடியுமாய் வரும்போது , ​​அவருடைய முடிவில்லாத மகிமையில் நாம் பங்கு கொள்வோம் . அப்படிப்பட்ட கிருபைக்காக நாம் எப்படி தேவனை துதிக்காமல் இருக்க முடியும்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , மரண வேதனையிலிருந்து நித்திய ஜெயத்தை கொண்டு வந்த உம் ஆச்சரியமான மற்றும் மகிமையான கிருபைக்காக நான் என் இருதயத்தின் ஆழத்திலிருந்து இருந்து உம்மை போற்றுகிறேன் . அதை நடப்பிக்க மா பெரிதான விலை கொடுத்ததற்காக உமக்கு நன்றி. நீர் என் வாயின் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதமானவர். உம்முடைய எல்லா பிள்ளைகளும் ஒன்றாக இணைந்து போற்றி துதிப்பதை விட நீர் அதிக துதித்தலுக்கும் மகிமைக்கும் பாத்திரரானவர் . அவர் உயிர்த்தெழுந்து ஆண்டவராக ஆட்சி செய்வதால் என் நம்பிக்கை நித்தியக்காலமாய் வாழும். உமது குமாரனும் என் ஆண்டவருமான இயேசுவின் நாமத்தில் உமக்கே எல்லா மகிமையும், மகத்துவமும் என்றென்றும் உண்டாவதாக, ஆமென்!

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து