இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்றையத்தினம் உன் கை நிறைய இல்லையா? நாளைய பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படும்போது இன்றைய அவசர மற்றும் முக்கியமான விஷயங்களில் இருந்து நீங்கள் திசைதிருப்பப்படவில்லையா? வரும் நாட்களில் உள்ள அனைத்து சாத்தியக்கூறுகளையும் பற்றி கற்பனை செய்து கொண்டிருக்கும் வேலைகளில், ​​நீங்கள் இந்தநாளுக்குரிய ஒரு வாய்ப்பை இழக்கிறீர்கள் அல்லவா? உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவது நேரத்தை வீணடிப்பதல்லவா? அப்படியென்றால் நாளை, அடுத்த வாரத்தைப் பற்றி ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும்? இன்று தேவனோடு சஞ்சரித்து நடப்போம், நாளை நமக்காக அவருடைய சத்தியத்திலே நம்பிக்கை வைப்போம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , இந்த தருணத்தை கைப்பற்றி, இன்று உம்மை மகிழ்விக்கும் மற்றும் பிறரை ஆசீர்வதிக்கும் வாழ்க்கையை வாழ அடியேனுக்கு பெலன் தாரும். நாளை அல்லது அடுத்த வாரம் என்ன நடக்கலாம் என்பதைப் பற்றி அதிக கவலைப்படாமல், இன்றைய அவசரத்தை உணரவும், தைரியமாகவும், இரக்கமாகவும், இரட்சிப்புடனும் செயல்பட என் இருதயத்திற்கு உதவியருளும் . உம்முடைய குமாரன் இப்பூமியிலே சுற்றித்திரிந்து நிறைவேற்றிய ஊழியத்தை, அடியேன் அருகிலிருந்து பார்க்கும் பாக்கியத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து