இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மனமார்ந்த நன்றிகள் — அதுவே நன்றாய் பாடல்களை பாடும்படி ஏதுவாய் இருக்கிறது ! நம்முடைய இரட்சிப்பின் ஆதாரமாகவும், நமது எதிர்காலத்தின் மையமாகவும் இயேசுவைக் கொண்டு, நாம் எப்படிப் பாடாமல் இருக்க முடியும்! ஆனால் பாடுவது நமக்கும் தேவனுக்கும் மாத்திரமல்ல . நம்முடைய பாடல்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இது நமது முதன்மையான ஆவிக்குரிய செய்தியாய் இருக்கவேண்டும் .

Thoughts on Today's Verse...

Hearts full of thanks — that's what makes for good singing! With Jesus as the source of our salvation and center of our future, how can we not sing! But singing is not just for us and God. God wants our songs to bless others. It is our ultimate spiritual talk.

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய , என் தேவனே , நீர் அற்புதமானவர் மற்றும் அதிசயமானவர் . உம்முடைய செயல்கள் அற்புதமானவை, நீர் நடப்பிக்கும் நற்காரியங்கள் புரிந்துகொள்ள முடியாதவை. என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் எப்போதும் உம் துதிகளை பிரஸ்தாபம் செய்யட்டும் . பாவம், நிந்தை , நியாப்பிரமாணம் மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து எங்களை இரட்சித்ததற்காக மற்றும் நீர் செய்த அனைத்து நன்மைக்காகவும் என் இருதயம் நன்றியினால் நிறைந்திருக்கட்டும். நீர் மாத்திரமே என் துதிகளுக்கும் , என் பாடல்களுக்கும், என் ஜீவனுக்கும் தகுதியானவர். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

O Lord my God, you are awesome and wondrous. Your works are magnificent and your deeds are beyond comprehension. May the words of my mouth and the thoughts of my heart ever declare your praises. May my heart be filled with thanksgiving for all that you have done to save us from sin, shame, law, and death. You alone are worthy of my praise, my songs, and my life. In the holy name of Jesus I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of எபேசியர் 5:19-20

கருத்து