இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மனமார்ந்த நன்றிகள் — அதுவே நன்றாய் பாடல்களை பாடும்படி ஏதுவாய் இருக்கிறது ! நம்முடைய இரட்சிப்பின் ஆதாரமாகவும், நமது எதிர்காலத்தின் மையமாகவும் இயேசுவைக் கொண்டு, நாம் எப்படிப் பாடாமல் இருக்க முடியும்! ஆனால் பாடுவது நமக்கும் தேவனுக்கும் மாத்திரமல்ல . நம்முடைய பாடல்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இது நமது முதன்மையான ஆவிக்குரிய செய்தியாய் இருக்கவேண்டும் .

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய , என் தேவனே , நீர் அற்புதமானவர் மற்றும் அதிசயமானவர் . உம்முடைய செயல்கள் அற்புதமானவை, நீர் நடப்பிக்கும் நற்காரியங்கள் புரிந்துகொள்ள முடியாதவை. என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் எப்போதும் உம் துதிகளை பிரஸ்தாபம் செய்யட்டும் . பாவம், நிந்தை , நியாப்பிரமாணம் மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து எங்களை இரட்சித்ததற்காக மற்றும் நீர் செய்த அனைத்து நன்மைக்காகவும் என் இருதயம் நன்றியினால் நிறைந்திருக்கட்டும். நீர் மாத்திரமே என் துதிகளுக்கும் , என் பாடல்களுக்கும், என் ஜீவனுக்கும் தகுதியானவர். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து