இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இப்போது ஒரு நிமிடம் காத்திருங்கள். எனக்கு சில வருத்தம் நிறைந்த நாட்கள் உள்ளன! எனக்கு எப்பொழுதும் காரியங்கள் கைக்கூடி வருவதில்லை ! என் கடினமான நேரங்களில் எனது நண்பர்கள் சிலர் என்னை கைவிட்டு துரோகம் இழைத்துள்ளனர். ஆகையினால் நான் எப்படி எப்போதும் சந்தோஷமாய் இருக்க முடியும்? பிதாவாகிய தேவன் எனக்கு ஒன்றை நினைப்பூட்டுகிறார்: "எப்போதுமே இன்பமாய் இருப்பதை விட, சந்தோஷம் மிக அதிகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மாறாக, சந்தோஷம் என்பது என் கிருபையின் ஆழமான உணர்வு மற்றும் என் சித்தத்திற்காக ஒப்புக்கொடுத்து வாழ்வது. நீங்கள் எங்கிருந்தாலும், இப்பொழுதும் காரியங்கள் எவ்வளவு நம்பிக்கையற்றதாய் தோன்றினாலும், உங்களுடைய வாழ்க்கை மகிமைக்காக வைக்கப்பட்டிருக்கிறது - அது என் (தேவனுடைய) மகிமை!" தேவனின் எண்ணிமுடியாத சத்தியத்தின் வெளிச்சத்தில், மற்ற அனைத்தும் சாதுவானதாகவும், தொடர்பில்லாததாகவும், முக்கியமற்றதாகவும் தெரிகிறது - அந்த கடினமான நேரங்கள் மற்றும் வேதனையான தருணங்கள் கூட. நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியடையலாம் ஏனென்றால் நாம் எப்போதும் தேவனுடையவர்கள்... !

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய மகிமை மற்றும் ஜெயத்தை குறித்து தெளிவான உணர்வை எனக்குத் தாரும் . பாவம், சாத்தான், மரணம் மற்றும் பாதாளம் / நரகத்தின் மீதான உம் ஜெயத்தை குறித்த சத்தியத்தை நம்புவதற்கு தயவுக்கூர்ந்து என் விசுவாசத்தை பெலப்படுத்துங்கள். என்னை உம் பரிசுத்த ஆவியினால் நிரப்பி, என் வாழ்கையில் ஆவியின் கனியை கொடுக்கும்படி செய்யும் , குறிப்பாக சந்தோஷத்தை வெளிப்படுத்தும்படி உதவிச்செய்யும் . நீர் எனக்காகச் செய்த எல்லா நன்மைக்காகவும் மற்றும் எனக்கு வாக்குத்தத்தம் பண்ணின எல்லாவற்றிற்காகவும் என் வாயை மகிழ்ச்சி என்னும் ஸ்தோத்திரத்தினால் நிரப்பியருளும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே , நான் சந்தோஷத்துடன் நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து