இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய நன்றியறிதல் தேவனுடைய மகத்துவம், அவரது மகிமை மற்றும் நன்மையிலிருந்து எழுகிறது. நாம் நன்றி செலுத்துவதற்கான உறுதியான காரணம், தேவன் நல்லவர், அவருடைய அன்பு அளவிடமுடியாதாது , என்றென்றும் நிலைத்திருக்கிறது, முடிவில்லாதது.

என்னுடைய ஜெபம்

எனது ஆத்துமாவினை மிகவும் நேசிக்கிறவரே , உம்முடைய அன்பின் நிரூபணமாக இயேசுவை அனுப்பியதற்காக உமக்கு நன்றி. நான் உம்மை நேசிக்கிறேன் பிதாவே . நீர் யார் என்பதையும், நீர் எனக்காக என்ன செய்தீர்கள் என்பதற்காக நான் உம்மை உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறேன். நீர் எனக்கு அளித்த வாக்குத்தத்தங்களுக்காக நான் உம்மை நேசிக்கிறேன். நீர் அடியேன் மீது பொழியும் அநேக ஆசீர்வாதங்களுக்காக நான் உம்மை நேசிக்கிறேன். எனக்கு நம்பிக்கை கொடுத்ததற்காக நான் உன்னை நேசிக்கிறேன். நீர் முதலாவது என்னை நேசித்ததால் நான் உம்மை நேசிக்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன், ஏனென்றால் எல்லா அன்பிற்கும் நீர் மாத்திரமே பாத்திரர் . ஆனால் என்னுடைய அன்பு உம்முடையது போல் வலிமையானது அல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், எனவே பரிசுத்த ஆவியின் வல்லமையால் உம்முடைய அன்பால் என்னை நிரப்புங்கள். உம்முடைய குமாரனும் என் இரட்சகருமான இயேசுவின் நாமத்தினாலே , நான் என் இருதயத்தை ஒப்புவித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து