இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு நமக்கு ஜீவனளிக்க இவ்வுலகிற்கு வந்தார். அவர் நமக்கு கட்டளைகளையோ, தீர்ப்பையோ, பயத்தையோ, வேலை உண்டாக்கவோ வரவில்லை. இயேசுவானவர் நமக்கு ஜீவனை முழு நிறைவாக கொடுக்கும்படி வந்தார். நாம் அவருடன் நித்தியத்திலே வாழ போகும் போது இது நமக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை நாம் அறிந்திருக்கிறோம் , ஆனால் நமக்கு ஜீவனை கொடுப்பேன் என்ற இயேசுவின் வாக்குத்தத்தம் இப்போதே தொடங்குகிறது என்பதை நாம் தெளிவாகக் கேட்டு புரிந்து கொள்ள வேண்டும் என்று யோவானானவர் விரும்புகிறார்! வரப்போகிற நித்ய ஜீவனுக்கு மாத்திரமல்ல , இப்பொழுது ஜீவிக்கும் ஜீவனிலும் அப்படியே !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , சில சமயங்களில் நான் என் ஜீவனை மிகவும் கவனமாக கையாளுகிறேன் , தோல்வியினால், இழப்பினால் உண்டாகும் ஆபத்தை எண்ணி , நீர் அருளும் வாய்ப்புகளையும், உம். சித்தத்தையும் அடியேன் நோக்கவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன். இன்றும், இன்னுமாய் எப்பொழுதும் அடியேன் எடுக்கும் எல்லா முடிவுகளிளும் இயேசுவையே மாதிரியாக வைத்து பரிசுத்த ஆவியானவரை கொண்டு வழிநடத்தும், உம் சித்தத்தை அறிந்து என் வாழ்க்கையை முழுமையுடன் வாழ ஏங்கும் இருதயத்தை எனக்குக் தாரும் . இயேசுவின் நாமத்தின் மூலமாய் உமது மகிமைக்காக இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து