இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் பதிலளிக்கக் கூடிய மிக முக்கியமான கேள்வி இது. இதை நீங்கள் மெய்யாகவே விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசத்தின் மூலமாக ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடன் மரித்தபோது, ​​நீங்கள் மிகவும் விசேஷித்த மரணமாக மரித்தீர்கள் என்றும், உங்கள் சரீர மரணம் உங்களை இயேசுவிலிருந்து பிரிக்காது என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஜீவிய காலம் முழுவதும் , நித்தியத்திலும் கூட இயேசு உங்களோடு இருப்பார் என்று விசுவாசிகிறீர்களா? இந்த ஒரு கேள்வியில் அடங்கியிருக்கிறது.

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள மற்றும் நித்திய பிதாவே, நீர் என்னை உம்முடைய குடும்பத்தில் புத்திர சுவிகாரம் செய்தபடியால் , அந்த மரணம் ஒருபோதும் என்னைக் மேற்கொள்ளாது என்று நான் விசுவாசிக்கிறேன். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த உம்முடைய குமாரனும் என் ஆண்டவருமான இயேசுவின் மூலம் நான் உம்முடையவன் என்பதால் சாத்தானால் என்னைப் அடிமையாக்க முடியாது, மரணம் என்னைக் கட்டிவைக்க முடியாது என்பதை அறிந்து புதிய உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ எனக்கு உதவுங்கள். என் அன்பான மீட்பரின் நாமத்தினாலே நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்..

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து