இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என்ன ஒரு வல்லமைமிக்க வாக்குத்தத்தம் ! இரக்கமும், மன உருக்கமும், நீதியுமுள்ள தேவனின் பிள்ளைகளுக்கு இருளிலே வெளிச்சம் உதிப்பது போல, ஆழமான ஆத்தும இருளின் மோசமான இரவுகளிலும் விடியல் உதிக்கிறது. மோசமான கலாச்சாரம் மற்றும் சீரழிவின் மிக கொடியக் காலங்களில் கூட, சாத்தானின் இருள் என்றென்றும் அதிகாரம் செய்யாது என்பதை பரிசுத்த ஆவியானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். இயேசுவின் சீஷர்கள் உலகத்தின் ஒளியின் தன்மையை பிரதிபலிக்கும் இடத்தில் அவனுடைய இருள் எவ்வளவேணும் இருக்க முடியாது மற்றும் இருளாம் உலகில் நாம் பிரகாசிக்கிற ஒளியாய் இருக்க வேண்டும் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் அன்பும் நிறைந்த தேவனே , இருளின் அந்தகாரத்தில் சிக்கியவர்களுக்கு உமது பரிசுத்த ஒளியையும் இயேசுவின் நம்பிக்கையின் ஒளியையும் பிரகாசிக்க எனக்கு உதவிச் செய்யும் . தேவனே , என் பாவத்தினால் உண்டான தோல்விகளுக்காக என்னை மன்னித்தருளும் . தயவுக்கூர்ந்து என்னை சுத்திகரித்து , பரிசுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் . உம்முடைய இரக்கமும் , மனஉருக்கமும் , நீதியுடைய பிள்ளையாக அடியேன் இருந்து ஒரு நேர்மையான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். உம் ஒளி என் மூலமாய் பிரகாசிக்கும்போது அதை மங்கச் செய்யவோ அல்லது மறைந்து போகவோ நான் விரும்பவில்லை. என்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உம் ஒளியை முழுமையாய் பிரகாசிக்க எனக்கு உதவிச் செய்யும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து