இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா! உணர்ச்சிகளால் நிரம்பிய பிரபலமான வாக்கியம். தேவ தூதன் நாசரேத்திற்கு வந்து, புருஷனுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒரு கன்னிகையைப் பார்க்கவும் பேசவும் வருகிறார். வரலாற்றை புரட்டிபோடக்கூடிய ஒரு செய்தி இவ்வுலகிற்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு, அவளுக்கு ஒரு முக்கியமான நினைப்பூட்டல் கொடுக்கப்பட்டது, அது அவள் நினைத்து பார்க்கமுடியாத சத்தியத்தை உடையதாகும் , அது "கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்."

என்னுடைய ஜெபம்

என் விண்ணப்பம் , தேவனே , நான் பலமுறை பாடின பாடல் : "ஆண்டவரே, என்னுடனே இரும் , நீர் இல்லாமல் என்னால் வாழ முடியாது, என்னால் சுமந்து செல்ல முடியாது,ஏன்? தனியாக ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது ." பிதாவே , வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள உம்முடைய நிலையான பிரசன்னம் எனக்குத் தேவை. நீர் என்னை உண்டாக்கியது முதல் உம் பிள்ளைகளை நீர் நிலைநிறுத்தியதால், ஒவ்வொரு நாளையும் நான் தனியாக எதிர்கொள்ள மாட்டேன் என்பதை அறிந்து வாழ்த்துவதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இயேசுவின் நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து