இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பிள்ளையாகிய இயேசுவை மேய்ப்பர்கள் கண்டப்பொழுது,மனம் எப்படி இருந்ததோ அப்படிப்போல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மறுபடியும் வருகின்ற வேளையில் அவரை பார்க்கும்போது நம்முடைய மனமும் அவ்வண்ணமாகவே இருக்கும்: நாம் பார்க்கும் மற்றும் கேட்கும் அனைத்து விஷயங்களுக்காகவும் தேவனை மகிமைப்படுத்துவோம், துதிப்போம், மேலும் அவை தேவன் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியதை போலவே இருப்பதைக் காண்போம். இயேசுவின் முதலாம் வருகையில் தேவன் தம்முடைய வார்த்தையைக் நிறைவேற்றியதால் , இயேசுவின் இரண்டாம் வருகையிலும் அவர் அதைச் செய்வார் என்று நாம் உறுதியாக அவருடைய வார்த்தையை நம்பலாம்!

என்னுடைய ஜெபம்

சத்தியமும், சர்வ வல்லமையுமுள்ள பிதாவே , நம்பிக்கைக்குரியவராகவும், சத்தியபரராகவும் இருப்பதற்காக உமக்கு நன்றி. வருடத்தின் இந்த கடைசி நாட்களில், அதே சமயம் அற்புதமான நேரத்தில் நான் செய்வதிலும் சொல்வதிலும் சிந்திப்பதிலும் உண்மையாக இருக்க எனக்கு உதவியருளும் . இயேசுவின் வருகையில் நான் ஒருபோதும் நம்பிக்கை இழக்காமல் இருக்கவும், அவர்மீது எனக்குள்ள நம்பிக்கை என்றும் என் வாழ்க்கையை உமக்கு இனியதாக அமையட்டும். உம் பரிசுத்த குமாரனின் நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து