இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வருஷத்தின் இறுதியில், இயேசுவுக்குள்ளாக இளைப்பாறுதல் பெற்றுக்கொள்ள அழைக்கப்படுவது நிச்சயமாக மகிழ்ச்சி அளிப்பதாகும் . எனவே, நாம் ஒரு புதிய வருஷத்தை தொடங்குவதற்கு முன், நமது நம்பிக்கைகள், நமது எதிர்காலம், கனவுகள் மற்றும் குறிப்பாக நமது பாரம் யாவற்றையும் அவர் பாதத்திலே வைத்து, அவர் நமக்கு அளிக்கும் இளைப்பாறுதலை பெற்றுக்கொள்வோம் .

என்னுடைய ஜெபம்

தேவனே , உமது கிருபையிலும், உமது சித்தத்திலும் அதிகமாய் சார்ந்திருந்து , குறைவாக கவலைப்பட கற்றுக்கொள்ள எனக்கு கற்றுத்தாரும் . நான் என் பாரங்கள் யாவற்றையும் இயேசுவிடம் ஒப்படைத்து, அவருடைய வழியையும் அவருடைய இளைப்பாறுதலையும் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும் அவர் எனக்குக் கற்பிக்க வேண்டும். சில நேரங்களில் நான் மிகவும் சோர்வாகவும் பெலனற்றும் இருக்கிறேன், என்னால் தொடர முடியாது என்று நினைக்கிறேன், எனவே அன்பான பிதாவே , அடியேன் இயேசுவுக்குள்ளாய் இளைப்பாறுதலை கண்டடைய உதவிச்செய்யும். அவருடைய பரிசுத்த நாமத்தினாலே நான் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து