இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவர் மறுபடியுமாய் திரும்பி வருவார் ! இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவின் முதலாம் வருகையை உலகம் நினைவுகூர விரும்புகிறது, அவருடைய இரண்டாம் வருகை இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை நாம் அவர்களுக்கு நினைப்பூட்ட வேண்டும். நாம் ஆயத்தமாக இருக்க விரும்புகிறோம் - அவருடைய மகிமைக்காக ஒரு ஒப்புவிக்கப்பட்ட வாழ்க்கை இன்னுமாய் முழு இருதயத்தோடே அவருடைய இரண்டாம் வருகையை ஆவலோடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம் .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , இயேசு மீண்டும் வருவார் என்று எனக்குத் தெரியும். அவர் திரும்பி வரும்போது நான் உண்மையுள்ளவனாகவும் எதிர்பார்ப்புடனும் இருப்பேன்.. அடியேன் ஜீவிக்கும் உலகில் வந்து எங்களைப்போல வாழ்ந்து என் பாவத்தைப் போக்க அவரை முதன்முறையாக அனுப்பியதற்காக உமக்கு கோடான கோடி நன்றி. உம்முடைய நித்திய வீட்டிலே வாழவும், பாவத்தின் மீதான உம்முடைய குமாரனின் ஜெயத்தில் பங்குகொள்ளவும் அவருடைய இரண்டாம் வருகைக்காக இன்னும் அதிகமாய் நன்றி செலுத்துகிறேன் . என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து