இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த உலகம் போராட்டம் நிறைந்த இடம். ஆம், நாம் சிறிது காலம் போராட்டத்திலே வாழ வேண்டும் . ஒரு காலத்திற்கு பிறகு போராட்டத்தை தவிர்த்துவிடலாம் அல்லது மீண்டும் சீரமைக்கும் வழியை நாம் காணலாம். ஆனால் இறுதியில் போராட்டம் நம்மை தேடி வரும். ஆனால் போராட்டத்தின் மத்தியில், நமது வெற்றி உறுதியானது என்பதை நினைவில் கொள்ளலாம் . இயேசுவானவர் ஜெயம் பெற்றார்! அவருடைய மாபெரும் வெற்றியில் நாமும் பங்கு கொள்வோம். ஒரு வேளை உங்களுக்குத் தெரியாவிட்டாலும் , இறுதி முடிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் இயேசுவின் மூலம் "மாபெரிதான ஜெயத்தைப் பெறுவார்கள்". இந்த ஜெயம் என்றென்றும் நிலைத்திருக்கும் ஜெயமாகும் !

என்னுடைய ஜெபம்

தேவனே , என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் எனக்கு வெற்றியைக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. எதிர்காலத்தை எதிர்பார்ப்புடன் வரவேற்கிறேன் , ஏனென்றால் ஒவ்வொரு நாளும் என்னை உம்முடன் நெருங்கி ஜீவிப்பதையும் , உம் பிள்ளைகள் அனைவருக்கும் நீர் திட்டமிட்டுள்ள அற்புதமான எதிர்காலத்தையும் அடியேன் அறிந்திருக்கிறேன் . அந்த நாள் மட்டும் வெற்றியை நான் இழந்துவிடாமல், அந்த நாளுக்காக ஏங்கி ஜெபிக்கிறேன்! வெண்குதிரையின் மீது ஜெயம் பெற்றவராக மீண்டும் வருகிறவராகிய இயேசுவின் திருநாமத்தினாலே நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து