இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒன்று. அடிப்படையான , எளிமையான மற்றும் புரிந்துகொள்ள எளிதானது.நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசம், ஞானஸ்நானம் மூலமாய் கிறிஸ்தவர்களானப்போது , ​​உலகெங்கிலும் உள்ள மற்ற எல்லா கிறிஸ்தவர்களுடனும் நாம் ஒன்றாக சேர்க்கப்படுகிறோம் .இனம், பாலினம் மற்றும் சமூக அந்தஸ்து இவை அனைத்தும் போய்விட்டது. எஞ்சியிருப்பது ஒருவர் மாத்திரமே , அந்த ஒருவர் இயேசு ஒருவரே . நம்முடைய வாழ்க்கை அவருடையது, இதனால் ஒருவருக்கொருவர் இசைந்த கணுக்களாய் இணைக்கப்பட்டுள்ளோம் . நம்முடைய முடிவும் அந்த பரலோகமே. நம்முடைய குடும்பம் நம் திருச்சபையே. அடைக்கப்பட்ட வழியோ, தடையோ கிடையாது. நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என்னை உம்முடைய குடும்பத்தில் தத்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் அனைவரும் இப்போது பூமியில் ஒன்றாக இருப்பது போல, பரலோகத்திலும் உமது சிங்காசனத்தைச் சுற்றி ஒன்றாக இணைந்து இருக்க உதவிச் செய்யும் . உம் நாமத்தை கூப்பிட்டு, உம் ஆவியைப் பகிர்ந்துகொள்பவர்களிடையே ஒற்றுமைக்காக நான் ஜெபிக்க உதவிச் செய்யும் , அதனால் மோதல்கள், சண்டைகள் மற்றும் பிளவுகளுக்கு ஒரு தீர்வு இருப்பதை உலகம் அறியும். எங்கள் இரட்சகராகிய இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து