இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வயது முதிர்ந்ததை குறித்துப் பற்றி நாம் கேலி செய்யும் போது, ​​வயதுச்சென்ற சவால்கள் கடினமானவை. நம்முடைய மரணத்தை நாம் உணருகிறோம். நம் சரீரம் நம்மை கைவிட்டு விடலாம் . ஒரு காலத்தில் நம்மால் செய்ய முடிந்ததை இப்பொழுது செய்ய இயலாமல் போகலாம் . கிறிஸ்தவர்களாகிய நாம், நமது வயது முதிர்ந்த காலம் உண்மையில் நம்மை நித்திய வீட்டிற்கு நெருக்கமாகவும், அழியாத மேனியை இயேசுவானவர் நமக்குக் கொடுக்கும் காலத்தையும் நாம் நெருங்குகிறோம் என்பதை நாம் அறிந்துக்கொள்ளுவோம் . மிக முக்கியமாக பரலோக காரியங்களின் நினைவூட்டல்களாக இருக்க, இந்த ஜென்மசரீரத்தின் சத்தியத்தை பயன்படுத்தி தேவன் நமக்கு உதவ முடியும், எப்படியென்றால் அவருடைய பரிசுத்த ஆவியின் உதவியால், நாம் நம்முடைய இரட்சகரைப் போலாகி , நம்முடைய பரலோக வீட்டிலே ஜீவிக்க ஆயத்தமாக இருக்கவும் மறுரூபமாகலாம் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , என்னுடைய வயது முதிர்ந்த நாட்கள் அதிகமாகுவதை விரும்புகிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன். எவ்வாறாயினும், ஒவ்வொரு நாளும் என்னுடைய வயது முதிர்ந்த நாட்கள் கூடும்போழுது , அடியேன் ​​​​உம்மிடம் இன்னு நெருங்கி வருவதற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் வயதாகும்போது நம்பிக்கையற்றவனாகவோ , விடாய்த்து போன மனிதனாகவோ அல்லது கசப்பான எண்ணம் கொண்டவனாய் மாறாமல் இருக்க தயவுசெய்து எனக்கு உதவியருளும் . அதற்குப் பதிலாக, தயவுக்கூர்ந்து என்னைப் புதுப்பித்து, உம்முடைய நித்திய வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய மற்றவர்களை ஆசீர்வதிக்க என்னைப் பயன்படுத்துங்கள். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து