இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அங்கேயே காத்திருங்கள் !" பொறுமையை விட அநேக விசேஷித்த குணாதிசயங்கள் உண்டு . வாழ்க்கையில் மிக விசேஷித்த சாதனைகள் பொறுமையால் நடக்கின்றது ." அதிசய தருணம்" வருவதற்கு நீண்ட காலம் நாம் பொறுமையுடன் காத்திருக்கும் போது பெரும்பாலாக "அதிர்ஷ்டம்" ஏற்படுகிறது - வேறுவிதமாகக் கூறினால், அதிர்ஷ்டத்தை நான் நம்புவதில்லை. எடிசன் அதைச் சிறப்பாகச் சொன்னார்: வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனைகள், உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள், அவருடைய சொந்த மிக அற்புதமான கண்டுபிடிப்புகள் "1% உத்வேகம் மற்றும் 99% உழைப்பு ."அங்கேயே காத்திருங்கள்!" மேலும் தேவனின் மகிமை உங்களுக்குள் வருவதைப் உணருங்கள் , அதிர்ஷ்டத்தால் அல்ல, மாறாக தேவனுடைய கிருபை, அன்பு மற்றும் உம்முடைய பராமரிப்பின் காரணமாகவே !

என்னுடைய ஜெபம்

என்றும் மாறாதவரும், அசைக்க முடியாதவருமாகிய பிதாவே , நீர் என் வாழ்க்கையில் அனுப்பிய நண்பர்களின் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவரும், உமது வல்லமையின் ஈவின் மூலமாயும் , நான் சோதனையின் கீழ் நிற்கவும், அக்கினியின் கீழே பொறுமையுடன் என் குணாதிசயத்தை நிரூபிக்கவும் எனக்கு உதவும் படி கேட்கிறேன் . எனக்கு விசுவாசத்தையும்,தைரியத்தையும், பொறுமையையும் கொடுங்கள், இதனால் என் வாழ்க்கை உம் மாறாத பெலனை காண்பிக்கிறது. மரணபரியந்தமும் உண்மையாக இருந்த, என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து