இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயற்கை பேரழிவுகள், முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால் நம் வாழ்வில் அநேக விஷயங்களளை நாம் இழந்துபோகிறோம். சாத்தானை "எப்போதும் வகைதேடும் திருடன் " என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் தேவன் என்றும் மாறாதவர் , யாராலும் ஆட்க்கொள்ள முடியாதவர்! நாம் அவருக்குள் நம் ஆத்துமாவை சேர்த்து வைத்து , அவருடைய கரங்களுக்குள் நமது ஆவி பாதுகாப்பாக இருப்பதை நன்று அறிந்து கொள்ளலாம். அவரே நமக்கு கோட்டையும், அடைக்கலமுமானவர்.

என்னுடைய ஜெபம்

என் இரட்சிப்பின் கன்மலையானவரே , நீர் என்றென்றும் மாறாதவராகவும், உண்மையுள்ளவராகவும் இருப்பதற்காக நன்றி. போராட்டங்களும், மாற்றங்களும் நிறைந்த இந்நாட்களில் பாதுகாவளின் ஊற்றாகவும், எதிர்காலத்தின் ஆதாரமாகவும் இருப்பதற்காக நன்றி. நீர், தூசியும் சாம்பலுமான என்னை தெரிந்து கொண்டதற்கு நன்றி. நீரே என் தேவனாயிருப்பதற்காக நன்றி , உம்மில் என் வாழ்க்கையையும், என் நம்பிக்கையையும், என் எதிர்காலத்தையும் வைக்கிறேன். இன்று, நீர் என்னில் மகிமைப்படுவீராக . இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து