இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆம், தேவனின் மந்தையைப் பயன்படுத்தி, தேவனுடைய பணத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் " சபை வழிநடந்துகிறவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். சபையை வழிநடந்துகிறவர்கள் தேவனுடைய ஜனங்களை காயப்படுத்தினால் துக்கத்துக்கும்,அவமானத்துக்கும் உள்ளாவார்கள்.ஏனென்றால் உலகெங்கிலும் உள்ள தேவனுடைய வார்த்தையின் ஊழியர்கள் பலர் சில பொருளாதார வளங்கள் அல்லது நிதி ஆதரpவுடன் ஊழியம் செய்கிறார்கள். தேவன் ஒருபோதும் ஊழியர்களுக்கு பொருளாதாரச் செல்வத்தை வாக்களிக்கவில்லை என்றாலும், அவர்களைக் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் நமக்கு நினைவூட்டுகிறார்.தேவனுடைய வார்த்தையை நம்முடன் பகிர்ந்துகொள்பவர்களுக்கு ஆதரவளிக்க இந்த வாரத்தையை பயன்படுத்துவோம். "எல்லா நல்ல விஷயங்களையும்" பகிர்வது பணத்தை விட அதிகம் என்பதை நினைவில் கொள்வோம்! நமது தேவ ஊழியர்கள் , நமது சுவிஷேகர்கள் மற்றும் நமது ஆசிரியர்களை நமது ஜெபங்களில் வைத்திருப்போம். குறிப்பிட்ட ஊக்குவிப்பு குறிப்புகளை அவர்களுக்கு தொடர்ந்து அனுப்ப உறுதி ஏற்போம், அதனால் அவர்களின் ஊழியம் நமக்கும் கர்த்தருக்கும் மட்டுமல்ல அவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே, நான் உம்மை அறியும்படிக்கு ஜீவனுள்ள வார்த்தையை அனுப்பினீர்கள் . உம்முடைய வார்த்தையை என்னுடன் பகிர்ந்து கொண்டவர்களுக்கு நன்றி. உமது சத்தியத்தையும் கிருபையையும் என்னோடு பகிர்ந்துகொண்ட வேத போதகர்களையும், வார்த்தையின் ஊழியர்களையும், போதக-ஆசிரியர்களையும் ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மனச்சோர்வு மற்றும் பாவத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும். அவர்களின் விருப்பத்தை பலப்படுத்துங்கள். அவர்களின் குடும்பங்களை ஆசீர்வதியும். உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்களை நிரப்புங்கள். மேலும் அன்பான பிதாவே , அவர்கள் எனக்கும் உமக்கும் எவ்வளவு விலையேறப்பெற்றவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள என்னைப் பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து