இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேய்ந்துபோகாத, உடைந்துபோகாத, அழிந்து போகாத பழமையாகாத அல்லது எப்போதாவது பழுதுபார்க்க வேண்டிய அவசியமும் இல்லாதது எங்களிடம் உள்ளது? நம்முடைய வாழ்க்கையும் எதிர்காலமும் பரலோகத்தை சிருஷ்டித்தவரும் , நம் உலகத்தை சிருஷ்டித்தவருமாகிய நித்திய பிதாவோடு பிணைந்திருப்பதால் நாம் மகிழ்ச்சியடையலாம், நன்றி செலுத்தலாம். கர்த்தர் நல்லவர் மட்டுமல்ல, நமக்கும் நல்லவர். ஆனால் நல்லவராக இருப்பதை விட, அவர் கிருபையுள்ளவர், மேலும் அவரது அன்பு தேய்ந்து போகாது, பழைமையாகாது , மங்காது, அல்லது பழுது பார்க்க அவசியமில்லாதது .

என்னுடைய ஜெபம்

எல் ஷடாய் - எல்லாம் வல்லவரே, ஸ்தோத்திரம் . நீர் எனக்கு உம் கிருபையைக் கொடுத்தீர், உம் ஆசீர்வாதங்களை எனக்குப் பொழிந்தருளினீர் , மேலும் என் மீதான உம் அன்பு பூமியில் என் சில நாட்களின் நிழல்களைத் தாண்டி வாழும் என்று உறுதியளித்தீர். உமக்கே என்றென்றும் ஸ்தோத்திரம் . என் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து