இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் நாம் பங்குகொண்டபோது (ரோமர் 6:3-7; கொலோசெயர் 2:12-15, 3:1-4), நாம் மரித்தோம் , ஆயினும் முன்பை விட ஜீவனுள்ளவர்களாக இருக்கிறோம். நாம் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டோம், இப்போது நமக்குள் வாசம் செய்யும் கிறிஸ்துவுடனே கூட மகிமையடைகிறோம் . மற்றவர்களை ஆசீர்வதிக்க அவர் நம் மூலமாய் கிரியை செய்கிறார் . நாம் இப்போது ஜீவனம் பண்ணும் இந்த மாம்ச உடலில் வாழும் இந்த புதிய வாழ்க்கை இனி நமது தனிப்பட்ட சக்திக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. நாம் ஜீவனோடு இருக்கிறோம், இந்த புதிய வாழ்க்கை கிறிஸ்துவின் கிரியை மூலமாய் நமக்கு உண்டாயிற்று . நம்முடைய ஒரே ஒரு மீட்பரின் மீது உள்ள விசுவாசத்தினால் இந்த ஜீவனுக்கு அதிகாரம் உண்டாயிற்று, அவரே நம்மை மீட்பதற்காகத் தம்முடைய ஜீவனை கொடுத்து அன்பைக் நமக்காக விளங்கச்செய்தார் .

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் பரிசுத்தமுள்ள தேவனே , உம் ஜீவனையும், வல்லமையையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக உமக்கு நன்றி. கிறிஸ்துவுடன் என் ஜீவனை இணைத்ததற்காகவும் , அவர் என்னுள்ளே ஜீவனோடு வாசம் செய்வதற்காகவும் உமக்கு நன்றி. அவருடைய அன்பும், கிருபையும் , வல்லமையும் என் கிரியைகளிலும் , குணத்திலும் காணப்படட்டும். என்னுடைய புதிய வாழ்க்கை இயேசுவையும், என்னில் அவருடைய பிரசன்னத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதனால் நான் அவருடைய கிருபையை மற்றவர்களுக்கு பகிர்ந்துக்கொண்டு அவர்களை அவரிடம் கொண்டு வர முடியும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து