இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் வாக்களித்த ஒருவரால் நீங்கள் எத்தனை முறை ஏமாற்றமடைந்திருக்கிறீர்கள்? எத்தனை நண்பர்கள் உங்களுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள்? நீங்கள் எப்போதாவது அன்பானவரால் கைவிடப்பட்டிருக்கிறீர்களா? எத்தனை சபைத் தலைவர்கள் உங்களை ஏமாற்றியுள்ளனர்? நாம் மற்றவர்களை நேசிக்கும்போதும், அவர்கள் மீது அக்கறை கொள்ளும் போதும் , நம் உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் நம்மைப் போலவே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரே காற்றை சுவாசித்து, நம்மைப் போலவே அதே நிலத்தில் நடக்கும் பெலவீனமுள்ள மனிதர்கள். ஒருவர் மாத்திரமே நம்முடைய இறுதி நம்பிக்கைக்கு தகுதியானவர். அவருடைய அன்பை நாம் அறியும் வகையில் அவருக்கு மிகவும் விலையேறப் பெற்றதை தியாகம் செய்து நமக்கு நிரூபித்து காட்டினார். நாசியிலே சுவாசமுள்ள மனிதர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்; தேவனால் மட்டுமே நம் நம்பிக்கையைப் பாதுகாத்து நம்முடைய எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும். அவர் மீது மாத்திரமே நம் நம்பிக்கையை வைப்போம்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , என் வாழ்க்கையில் சக மனிதர்களின் தோல்வியால் என் இருதயத்தில் உடைந்த இடங்களை நீர் அறிவீர். உம்முடைய மக்களில் உள்ள தோல்விகள் மற்றும் முரண்பாடுகள் காரணமாக நான் சில நேரங்களில் உம்முடைய வழியில் ஏமாற்றமடைந்துள்ளேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அவர்களின் தோல்விகள் உம்முடைய தோல்வியைக் குறிக்காது என்பதை ஆழமாக நான் அறிவேன், ஆனால் அதை அப்படி புரிந்துகொள்ளுவது மிகவும் கடினமான காரியம் . அடியேனை உம் சமூகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். என்னைத் தோல்வியுறச் செய்பவர்களிடம் அதிக இரக்கத்தை காண்பிக்கும் இருதயத்தை எனக்குத் தாரும் . கர்த்தாவே, என் விசுவாசத்தை வலுவாகவும் உறுதியாகவும் உம்மில் நிலைநிறுத்தியருளும் . தேவனே , உம்மில் நம்பிக்கை வைத்துள்ளேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து