இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பாவம், துன்மார்க்கம் மற்றும் தீமை பற்றிய உண்மையைச் சொல்ல பயப்படும் உலகில் யோவானின் வார்த்தைகள் மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது. இன்னும் இவ்வுலகில் காணாமற் போன ஆடுகளாகிய மனிதர்கள் - இயேசுவை அறியாதவர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் ஆனால் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாதவர்கள் - அவர்கள் யாவரும் மிகவும் அவசியமாய் மனந்திரும்ப வேண்டும். அதாவது நம் இருதயங்களையும் வாழ்க்கையையும் மாற்றி, தேவனை தேடுவது, இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு நம் குணாதிசயங்களை மாற்றிக்கொண்டு வாழ்வதாகும் . நாம் அவரைப் பின்பற்றவும் கீழ்ப்படியவும் தேர்வு செய்கிறோம், நம் விருப்பத்திற்கு மாத்திரம் அல்ல. ஆம், இரட்சிப்பு தேவனின் ஆச்சரியமான கிருபையினால் நமக்கு கொடுக்கப்படுகிறது . மறுபுறம், நம்மை மறுரூபமாக்காமல் அப்படியே இருக்கச் செய்யும் கிருபை மெய்யான கிருபை அல்ல. கிருபை இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலமும், அவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் மூலமும் நம்மை மன்னிப்பது மட்டுமல்லாமல், தேவன் , அவருடைய வழிகாட்டுதல் மற்றும் நமது நோக்கம் இல்லாத மற்றும் அழிந்துபோகக்கூடிய வாழ்க்கையிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

Thoughts on Today's Verse...

John's words sound strange in a world afraid to tell the truth about sin, wickedness, and evil. Yet all lost people — people who do not know Jesus and those who claim to follow him but don't obey him — we all desperately need to repent. That means changing our hearts and lives, seeking after God, and turning our behaviors around to live for Jesus as Lord. We choose to follow and obey him, not our wants. Yes, salvation is given to us by God's incredible grace. On the other hand, grace that leaves us unchanged is not true grace. Grace not only forgives us through Jesus' sacrificial death on the Cross and our faith in him but also liberates us from the empty and destructive life without God, his guidance, and our purpose.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் பிதாவே , நான் செய்த என் பாவத்திற்காக அடியேனை மன்னித்தருளும். நான் என் இருதயத்தை உம்மிடமாய் திருப்பி, உன் சித்தத்தின்படியும் , உம் மகிமைக்காகவும் என் வாழ்க்கையை வாழும்படியாய் ஒப்புக்கொடுக்கிறேன் , என் சுய விருப்பத்தின் படி அல்ல, நிச்சயமாக இந்த விழுந்துப்போன , உடைந்த மற்றும் இழந்த உலகின் வழிகள் அல்ல. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Forgive me, dear Heavenly Father, for my sin. I turn my heart back to you and commit to live my life according to your will and for your glory, not my own and certainly not the ways of this fallen, broken, and lost world. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of மத்தேயு-Matthew - 3:1-2

கருத்து