இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக மேசியாக்கள் நமக்கு கொடுக்கப்பட்டாலும் மெய்யான மேசியா மாத்திரமே நம்மை இரட்சிப்பவர் . நாம் அநேக வேளைகளில் பல ஆண்டவர்களுக்காக (எஜமான் )இவ்வுலகில் வாழும்போது, ​​ஒரே ஒரு ஆண்டவர் மாத்திரமே நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவித்து இரட்சிக்கிறவர். தேவனிடம் நாம் கிட்டிச் சேர பல வழிகள் கூறப்பட்டாலும், இயேசு தான் ஒரே வழி என்று வலியுறுத்துகிறார். எனவே நாம் இறுதியாக யதார்த்தத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம் : இரட்சிப்பு இயேசுவின் மூலமாய் மட்டுமே இருப்பதாக நம்புகிறோமா, இல்லையா? அது நம்முடைய சொந்த விருப்பம். ஆனால் இயேசுவைப் குறித்து நாம் என்ன முடிவு செய்கிறோம் என்பது உண்மையில் எல்லாவற்றையும் குறித்து தீர்மானிக்கிறது. இயேசு உங்கள் ஆண்டவரா? உங்கள் வாழ்க்கையில் எல்லா நாமங்களுக்கு மேலான நாமம் இயேசு என்ற நாமமா ? இயேசு உங்கள் இரட்சகரா? அப்படி இல்லையென்றால், தயவுக்கூர்ந்து உங்கள் முடிவினை மறுபரிசீலனை செய்யுங்கள், ஏனென்றால் பரிசுத்த வேதாகமம் சொல்கிறது: " இயேசுவை தவிர இரட்சிப்பு வேறு யாரிடமும் இல்லை."

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , இயேசுவுக்குள்ளாய் உமது கிருபையை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்காக நன்றி. நான் ஒருபோதும் இயேசுவின் கனமான நாமத்தை வீணாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இயேசுவே வந்து என் இருதயத்திலும் என் வாழ்விலும் ஆண்டவராக ஆட்சி செய்யட்டும். நான் மற்றவர்களை நடத்தும் விதத்தில் இயேசு என் வாழ்வின் மூலமாய் அறியப்படுவார் . இயேசுவுக்கு என் விசுவாசத்திற்கு இடையே வேறு எவரும் இல்லை என்பதை இயேசுவானவர் அறிந்து கொள்ளட்டும். உம்முடைய குமாரனும் என் இரட்சகருமான இயேசுவின் அருமையான நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து