இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பட்டங்களை விட, இயேசுவின் இந்த இரண்டு நாமங்களும் தேவனுடைய ராஜ்யத்தில் நம் வாழ்க்கையை கட்டியெழுப்பக்கூடிய தூண்களாகும். இயேசுவே கர்த்தர் ! அவர் எங்களை ஆளுகை செய்கிறவர் மற்றும் ராஜாதிராஜா . அவர் நம்முடைய போதகர் மற்றும் வழிநடத்துபவர் . நம்முடைய இருதயங்கள் அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, அவருடைய வழிநடத்துதலுக்குத் ஆயத்தமாய் இருப்போம் . நம் இருதயங்களிலும் வாழ்விலும் இயேசுவுக்கு எதிர்த்து நிற்பதில்லை . இயேசுவே கிறிஸ்து! அவர் மேசியா, பழைய ஏற்பாட்டின் வாக்களிக்கப்பட்ட இரட்சகர். அநேக தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தது இவரைப் பற்றிதான். இயேசு நம்மை ஆளுபவர் மற்றும் இரட்சகர், பிராதான ஆசாரியர் மற்றும் மேசியா. அவர் நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்ல தேவனானவர் கொடுத்ததான ஈவு . நமக்கு மன்னிப்பையும், மீட்பையும், இரட்சிப்பையும் கொண்டுவர சிலுவைக்குச் சென்றவர் இயேசு. சிலுவையில் அறையப்பட்ட இயேசு, கர்த்தர் மற்றும் கிறிஸ்து.

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, உமது வல்லமைமிக்க நாமத்தைத் துதிக்கிறோம், உமது கிருபை மற்றும் தன்னலமற்ற அன்பிற்காக உமக்கு நன்றி. அன்பான பிதாவே, உமது குமாரனாகிய இயேசுவை எங்களுடைய பாவங்களுக்காக மரிக்க கொடுத்து , எங்களுக்கு நம்பிக்கையையும், ஜீவனையும் அளிக்கவும், எங்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரவும் அவரை உயிர்த்தெழ செய்ததற்காக நாங்கள் உம்மைப் போற்றுகிறோம். மாட்சிமையுள்ள , தேவனே என் இருதயத்தை இயேசுவிடம் ஒப்படைக்கவும், என் இரட்சிப்பின் ஆண்டவரைப் புகழ்வதற்கு என் உதடுகளைத் திறக்கவும் எனக்கு உதவுங்கள். நான் இயேசுவின் வல்லமையான நாமத்திலும், ஆவியானவரின் ஓத்தாசையோடே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து