இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் குணாதிசயத்திலும், இரக்கத்திலும் அவரைப் போல் இருக்குமாறு நம்மை சிருஷ்டித்தார். நாம் திவ்விய சுபாவத்துடன் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளோம், மேலும் இயேசுவானவர் மீண்டும் வரும்போது நாம் ஆயத்தமாக்கப்பட்டிருப்போம் என்று வாக்களிக்கப்பட்டிருக்கிறோம். நம்மில் யாருடைய வாழ்க்கை இயேசுவோடு இணைந்திருக்கிறதோ! அவர்களைத் தவிர இவ்உலகில் உள்ள அனைத்து காரியங்களும் கேடு உள்ளதும், அழிந்து போகக்கூடியதுமாய் இருக்கிறது . முழு மனதுடனே அவரை பின்பற்றுவதே நம்முடைய தலையாய கடமையாய் இருக்கிறது ! பேதுரு இங்கே இந்த வாக்குதத்தத்தை நமக்கு உறுதிபடுத்துகிறார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , என் நித்திய கன்மலையே , உமது சிறப்பான வாக்குறுதிகளை எனக்கு வழங்கியதற்காக உமக்கு நன்றி. உம்மை இன்னும் முழுமையாக அறிந்துகொள்ளவும், இன்றைக்கு உம் முகத்தைப் பார்க்கவும் நான் ஏங்குகிறேன், அதுபோல் ஒரு நாள் உம்மை முகமுகமாய் தரிசிப்பேன் என்று விசுவாசிக்கிறேன். என்னையும் என் இருதயத்தையும் இச்சையிலிருந்து பாதுகாத்தருளும் . எல்லா அன்போடும், போற்றுதலோடும், அடியேனை உம்முடையவனாக மாற்றிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து