இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் ஏன் அதைச் செய்தார்? அவர் அதை எப்படி செய்தார்? அவர் "தேவன் எப்படி நம்மோடு இருந்தார் " , இன்னும் " மாம்சத்திலே எப்படி " தேவனை வெளிப்படுத்தினார் ? நாம் அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது, ஆனால் அவர்! தேவனின் குமாரனும் நாசரேத்தின் இயேசுவாக இருந்தார், அவர் பிறந்தார் மற்றும் அவர் பிறந்த போது ஒரு சத்திரத்தின் முன்னணையிலே வைக்கப்பட்டார் மற்றும் அவரது மரணத்தின் போது சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, இயேசுவைத் தம்முடைய குமாரனாக எல்லா அதிகாரமுள்ளவராய் விளங்கச்செய்தார் . பூமியிலே தேவதூதர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவரை கண்டார்கள், இப்போது அவருடனே கூட பரலோகத்திற்கு செல்கிறார்கள் , அவர் இப்போது ஆட்சி செய்கிறார். உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அவர் பிரசங்கிக்கப்பட்டார், அவர்களில் பலர் அவரை நம்பினர். ஒரு நாள், இயேசு தம்முடைய மகிமையை அனைவரும் காணும்படி வானத்திலே வெளிப்படுவார் . நீங்கள் தேவபக்தியை புரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் இயேசுவுடனே கூட துவங்குங்கள் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள மற்றும் அற்புதமான தேவனே , என்னைப் போன்ற ஒரு பாவியை மீட்டு இரட்சிப்பற்கான உம் திட்டம் நம்பமுடியாதது. எல்லா ஜனங்களும் உம்மிடம் வந்து இரட்சிக்கப்படுவதைக் நீர் காண விரும்புகிறீர் என்பதை இயேசு வெளிப்படுத்தினார். எங்கள் மீது கொண்டுள்ள அன்பின் நிமித்தமாக நீர் கொடுத்த அப்படிப்பட்ட தியாகம் எங்களுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டது. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே ஆவியின் வல்லமையினால் எனக்கும் அதிகாரம் கொடுத்து பெலப்படுத்துங்கள். இன்று என் வாழ்விலும், என் குடும்பத்திலும், என் நண்பர்களிடையேயும், என் உடன் பணிபுரிபவர்களிடமும், என்னுடனே பள்ளிக்குச் செல்பவர்களிடத்திலும், குறிப்பாக என் எதிரிகள் முன்னிலையிலும் உமது தேவபக்தியின் இரகசியம் காணப்பட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன். இயேசுவின் வல்லமையான நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து