இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்பிக்கை. நாம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கலாமா? அவர் நிச்சயமாக உண்மையுள்ளவராகவே இருக்கிறாரா?. இயேசு பூமியில் வாழ்ந்த போதும் அல்லது எரேமியா தேவனுடைய உறுதியான சத்தியத்தை பயமின்றி பேசியபோதும் நாம் உயிருடன் இருந்திருக்க விரும்பலாம். ஆனால் விஷேசமாக இன்று ஜீவனோடு இருக்கிற நாங்கள் பாக்கியவான்கள். தேவனுடைய எண்ணி முடியாத கிரியையின் முடிவில் நாம் நிற்கிறோம். நாம் வேதாகமத்திலே அநேக திருஷ்டாங்கங்களை பார்த்து, அவர் தமது மக்களுக்கு உண்மையுள்ளவர் என்பதை அறியலாம். தேவன் நித்தியானந்தமுள்ளவர் என்பதை நாம் அறிந்திருப்பதால், நாம் தைரியத்துடன் எதிர்காலத்தை நோக்கிச் செல்ல முடியும்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நீர் எவ்விடத்திலும் இருப்பதை நான் அறிவேன்! காலையும் , மாலையும் , நீண்ட இரவுகளிலும் , நான் தனித்து விடப்படுவதில்லை என்று எனக்குத் நன்றாய் தெரியும். எனது எல்லா நாட்களிலும் என்னை அறிந்ததற்காகவும் என்னுடன் இருப்பதற்காகவும் உமக்கு நன்றி. என் செய்கையிலும், வார்த்தையிலும் உம்மை கனப்படுத்த முற்படுகையில், தயவுசெய்து உம் பிரசன்னத்தை இந்த நாளில் எனக்குத் தெரியப்படுத்துங்கள். என் ஆண்டவராகிய , இயேசுவின் நாமத்திலே , நான் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து