இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவைப் பற்றிய மிக அடிப்படையான மற்றும் மேலான கூற்றுகள் 1 & 2 தீமோத்தேயு புத்தகத்திலும், தீத்து புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடினமான இடங்களில் உள்ள திருச்சபையை முதிர்ச்சியடையச் செய்யும்பொருட்டு ஊழியர்களுக்கு இந்த நிருபங்கள் உதவுகின்றன. அவை நம்பமுடியாத நடைமுறை நிருபங்கள் , ஆனால் இயேசுவின கிரியை , அவருடைய பரிசுத்தம் மற்றும் அவருடைய விசுவாசத்தில் வேரூன்றியுள்ளன. விசுவாசமானவருக்காக நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்! நம்மை மீட்பதற்காக அவர் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்ததின் காரணமாக அவர் நமக்காக வருவார் என்று நம்புகிறோம். நாம் காத்திருக்கும் போது, ​​நன்மையை மாத்திரம் செய்ய ஆர்வமுள்ள மக்களாக இருப்பதன் மூலம் அவருடைய ஊழியத்தை மகிமைப்படுத்துகிறோம் , இயேசு நம்முடைய கர்த்தர் என்பதை நம் வாழ்வில் காண்பிக்கிறோம் .

என்னுடைய ஜெபம்

தேவனே , நான் இயேசுவின் வருகைக்காக காத்திருக்கிறேன். அவர் எனக்காக மறுபடியும் வருகிறதினால் , நீண்ட, கடினமான, ஊக்கமளிக்கும், வெளித்தோற்றத்தில் பயனற்ற நாட்களில் கூட, என் வாழ்க்கையின் திசையில் அர்த்தமும் நோக்கமும் இருப்பதை நான் அறிவேன். இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கு எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்திருக்க என் இருதயத்தை அனல்மூட்டி எழுப்பும் , மேலும் நன்மை மற்றும் பரிசுத்தத்தை மட்டுமே விரும்ப எனக்கு ஆவலை தாரும். நான் உம்மை முகமுகமாய் காண விரும்புகிறேன்! ஆனால், என் பிரியமான ஆண்டவரே, நானும் உம்மைப் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்! இயேசுவின் மகிமையான நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து