இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் யார் என்பதும் , நம் வாழ்க்கையில் எவைகள் நமக்கு உரியதாகிறது , நாம் எதைச் சாதிக்கிறோம் என்பது எல்லாம் தேவனின் கரங்களில் உள்ளது. அவருடைய ஆசீர்வாதம் இல்லாமல் நிலையான மகிமையை நாம் அடைய முடியாது. அவருடைய புகலிடமும்,ஆசீர்வாதமும் இல்லாமல் நமது எதிர்காலத்தையோ, நம் சுதந்திரத்தையோ நாம் பாதுகாக்க முடியாது. அனைத்து சாதனைகள் மற்றும் பெருமைகளின் அடிப்படையானது, நாம் விருப்பத்துடன் நம் வாழ்க்கையை அவருடைய பாதுகாப்பில் வைப்பதில் அமைந்துள்ளது .

என்னுடைய ஜெபம்

என் கன்மலையும் , என் வாழ்வின் கோட்டையுமாகிய உம்முடைய கரங்களில் என் வாழ்க்கையை ஒப்புவிக்கிறேன். என் எதிர்காலத்தைப் பொறுப்பேற்று, உமது மகிமைக்காக என்னைப் எடுத்து பயன்படுத்துங்கள். உம்மிடம் நான் அடைக்கலம் அடைகிறேன், என் நாட்களை பயனுள்ளதாக்க உமது பலத்தை நம்பியிருக்கிறேன். இயேசுவின் விலையேறபெற்ற நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து