இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய இரட்சிப்பு நாம் மேன்மைபாராட்ட இடமளிக்காது. தேவன் விரும்புவதற்கு ஏற்ப நியாயபிரமாண சட்டத்திட்டங்களை முழுமையாய் நம்மால் கைக்கொண்டு வாழ முடியாது . தேவனின் குணாதிசயத்துக்கு ஒப்பாக நம்மால் வாழ முடிவதில்லை. நாம் நொறுங்கிப்போய் மற்றும் பாவிகளாக இருந்தபோது, ​​தேவனானவர் தம்முடைய நேச குமாரன் இயேசுவை நமக்காக அனுப்பி, நம்முடைய பாவங்களுக்கு விலையாக அவரையே பலியாக செலுத்தி நமக்கு இரட்சிப்பை உண்டுப்பண்ணினார் (ரோமர் 5:6-11). தேவனின் அளவுக்கடந்த இரக்கமுள்ள கிருபையையும், நம் இரட்சகராகிய இயேசுவின் அசாத்தியமான தியாக அன்பையும் தவிர, நாம் மேன்மை பாராட்ட வேறு எதுவும் இல்லை.

என்னுடைய ஜெபம்

பிதாவே, நியாயப்பிரமாணத்தின் நியாயத்தீர்ப்பிலிருந்து என்னை மீட்பதற்காக உமக்கு கோடான கோடி நன்றி, . இயேசுவே, என் பாவத்திற்கான கடனை நீர் செலுத்தியதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, என்னைச் சுத்திகரித்து, பரிசுத்தமாக்கி, என்னுள்ளே எப்பொழுதும் வாழ்வதற்காக உமக்கு நன்றி. தேவனே , உம் எண்ணிமுடியாத கிருபைக்காக பிதாவே உமக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து