இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

யாக்கோபு ஆசிரியர் எப்பொழுதும் நிறைய சத்தியத்தின் காரியங்களை ஒரு சிறிய செய்தியாக நமக்கு தொகுத்து வழங்குகிறார் . பரிசுத்தத்திற்கான இந்த அழைப்பை மையமாக வைத்து அதிலே அதிக கவனம் செலுத்துவோம்: "ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; .... தேவனிடத்தில் சேருங்கள்..." நம் இருதயங்களை தேவனிடம் ஒப்புக்கொடுத்து அவரிடம் நெருங்கி வருவோம். நாம் தேவனுடைய பிரசன்னத்திற்கு வந்து, அவரிடம் நெருங்கி வரும்போது, ​​அவருடைய பரிசுத்தம், நீதி மற்றும் கிருபையின் வெளிச்சத்தில் நம்முடைய எண்ணங்கள், நோக்கங்கள் மற்றும் நடத்தைகள் என்னவாக இருக்கின்றன என்பதை நாம் அறிந்துக்கொள்வோம் . அதே நேரத்தில், பிசாசானவன் நம் பிதாவின் பரிசுத்தமான மற்றும் நீதியுள்ள குணத்தின் பிரகாசத்தால் நம் சமூகத்திலிருந்து விலகி ஓடிப்போவேன் என்பதை நாம் அறிவோம். முதலாவது தேவனைத் தேடுவோம் - அவருடைய நீதியுள்ள குணம், இரக்கமுள்ள கிருபை , உண்மையுள்ள அன்பு மற்றும் மெய்யான நீதி போன்ற அவருடைய குணாதிசயத்தை தேடுவோம் . தேவனிடம் நெருங்கி ஜீவிப்போம் , நித்தமும் அவருடைய பிரசன்னத்தில் இருக்க ஏங்குவோம், அதனால் நம் அன்றாட வாழ்க்கையில் அவரைப் போலவே மறுரூபமாக முடியும். நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் பரிசுத்தமாக்கி, முழுவதுமாக அவரைபோலவே ஆக்கும்படி தேவனிடம் மன்றாடுவோம் !

Thoughts on Today's Verse...

James always packs a lot of truth into short messages. Let's focus on the center of this call to holiness: "Submit yourselves, then, to God. ... Come near to God..." Let's draw our hearts closer to God. When we come into God's presence and draw close to him, we know our thoughts, motives, and behaviors will be seen for what they are in the light of his holiness, righteousness, and grace. At the same time, we know that the devil is forced out of our presence by the radiance of our Father's holy and righteous character. Let's seek God — his righteous character, gracious compassion, and faithful love and justice. Let's draw near to God, yearning to be in his presence so we can be more like him in our daily lives. Let's ask God to cleanse us, make us holy, and wholly his!

என்னுடைய ஜெபம்

நீதியின் பிதாவே , உம் அன்புக்காகவும் நீர் அளித்த மன்னிப்பிற்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி. இப்போதும் , ​​அன்பான பிதாவே , நான் உம்மிடம் நெருங்கி வரவும், உம்மை நன்றாக அறிந்து கொண்டு , அதினால் என் அன்றாட வாழ்க்கையில் உம்மை முழுமையாகப் பிரதிபலிக்கவும் ஏங்கும்போது எனக்கு உதவிச் செய்யும் . அடியேனுடைய மாயமாலம் அல்லது இரகசிய பாவத்திலிருந்தும் என் இருதயத்தைச் சுத்தப்படுத்தியருளும் . என் மனசாட்சியைச் சுத்தப்படுத்தி, உமது கிருபையையும் பரிசுத்தத்தையும் எடுத்துக்காட்ட எனக்கு அதிகாரத்தை தாரும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Righteous Father, thank you for your love and forgiveness. Now, dear Father, help me as I yearn to draw closer to you, know you better, and reflect you more fully in my daily life. Purify my heart of any duplicity or secret sin. Cleanse my conscience and empower me to exemplify your grace and holiness. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of யாக்கோபு-James  4:7-8

கருத்து