இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிலுவை எவ்வளவு கொடூரமானது, இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு இறுதி அத்தியாயம் அல்ல. இயேசு மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இயேசுவின் உயிர்த்தெழுதலின் காரணமாக நாம் இரண்டு விஷயங்களை நம்பலாம்: 1) இயேசு தம்மை விசுவாசித்தவர்களுக்கு மகிமையான ஜெயத்துடன் ஒரு நாளிலே திரும்பி வருவார் 2) இயேசு மீண்டும் வரும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் பின்பு நாம் நேசிப்பவர்களுடன் ஒன்றாக சேர்ந்து அந்த மகிமையிலே அவரோடே கூட இருப்போம். இந்த இரண்டு சத்தியங்களும் , இயேசுவுக்குள் எனக்கு பிரியமான நண்பர்களே, நாம் எங்கிருந்தாலும் அல்லது நம்முடைய தற்போதைய சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், நம்முடைய எதிர்காலத்திற்கான வாழ்க்கையை குறித்த ஒரு உறுதியான நம்பிக்கையுடன் காத்திருக்க இந்த காரியங்கள் அனுமதிக்கின்றன.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வவல்லமையுள்ள பிதாவே, இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பியதற்காகவும் , உம்மோடும் இன்னுமாய் எங்களுக்கு முன்னமே மரித்து இயேசுவோடு பரதேசியிலிருக்கும் நான் நேசிப்பவர்களோடும் ஒரு நித்திய வாழ்வின் நிச்சயத்தை எங்களுக்கு அளித்ததற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவானவர் ஒரு நாளிலே பரலோகத்தின் தூதர்களோடு மகிமையுடன் திரும்பி வரும்போது , மரணத்தின் மீது முழுமையான ஜெயத்தை கொண்டுவரும் அந்த நாளையும் அவரோடு கூட நித்திய காலமான ஜீவியத்தையும் பெறப்போகிறோம் என்ற நம்பிக்கையோடே நாங்கள் எதிர்நோக்குகிறோம் . பிதாவே இயேசுவின் நாமத்தினாலே எங்களுக்கு ஜெயத்தை கொடுத்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றி, அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து