இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஜெயம் ! நித்தியமான ஜெயம் !! வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனையையும்,மரணத்தையும் குறித்து உங்களிடம் பதில் இல்லை என்றால், உங்களுக்கான ஜெயம் எப்பொழுதும் இல்லை. விம்பில்டன் மற்றும் உலகத் தொடர்கள் ஒவ்வொரு ஆண்டும் விளையாடப்படுகின்றன. அவற்றில் வெற்றியாளர் என்பவர் அந்த ஒரு வருடத்திற்கு மாத்திரமே வெற்றி பெற்றவர் ஆவார் . ஆனால், ஒரு கிறிஸ்தவனோ என்றென்றும் ஒரு வெற்றியாளராக இருக்கிறான், ஏனென்றால் இயேசு கிறிஸ்துவுக்குள் , ஒரு கிறிஸ்தவனுக்கு மரணத்தின் மீது ஜெயம் நித்தியமாக இருக்கிறது.

என்னுடைய ஜெபம்

இயேசு கிறிஸ்துவில் எனக்கு வெற்றியைக் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் . பாவத்துடனான அன்றாடப் போராட்டங்களிலிருந்த என்னை , அவர் மரணத்திலிருந்து எழுப்பி, அவருடைய நித்திய வீட்டிற்கு ஜெயமாய் எப்படி அழைத்து செல்வாரோ அப்படியே , அவருடைய ஜெய சித்தத்தை இப்போதே என்னிடத்தில் வெளிப்படுத்துங்கள். என் ஜெய இராஜாவாகிய இயேசுவின் மூலம் நான் அதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து