இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் நற்கிரியைகளை செய்பவர்களாகவே இருக்க வேண்டும்! நம்முடைய தேவன் நமக்கு வாய்ப்பளிக்கும்போது, ​அவற்றை உபயோகித்து மற்றவர்களுக்கு நன்மையை மாத்திரமே செய்யக்கடவோம் ! இந்த உலகத்தின் ஆசை இச்சைகளினால் பிடிக்கப்பட்டவர்களைப் போலல்லாமல் - கிறிஸ்துவுக்குள் முன்னேற விரும்புபவர்கள், ஒருவரோடு பயணிக்க விரும்புகிறவர்கள் அல்லது கடினமான சூழ்நிலைகளில் இருந்து வெளியேற விரும்புகிறவர்கள் - ஆகிய யாவருக்கும் நன்மையை மாத்திரம் செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடுவோமாக ! மேலும், நாம் செய்யும் நன்மை நாம் அறிந்த மற்ற விசுவாசிகளிடம் மட்டுமே நின்றுவிடக் கூடாது. உலகில் எல்லா மக்களுக்கும் நன்மை செய்வோம், தேவனுடைய அன்பான இரக்கத்தையும், கிருபையையும் மற்ற எல்லா விசுவாசிகளுடன் பகிர்ந்து கொள்வோம்!

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே, நீர் மட்டுமே உண்மையிலேயே நல்லவர் மற்றும் உம் எல்லா வழிகளிலும் பரிபூரணமானவர், இருப்பினும், இன்றும், இந்த வாரமும், இரட்சகர் எங்களுக்காக மகிமையுடன் திரும்பும் காலம் வரை, நாங்கள் உமக்கு ஊழியஞ் செய்யும்போது, ​​உம் திருச்சபையிலும் என்னிலும் உம் நற்குணம் காணப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கும் நீர் எங்களுக்கு வழங்கும் வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களுக்கு உதவும். இயேசுவின் வல்லமையான நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து