இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிருபை நமக்கு இலவச ஈவாக வழங்கப்படுகிறது. அதை விலை கொடுத்து வாங்கவோ அல்லது தகுதி பெறவோ முடியாது. ஆனால் நமது சுய அழிவு மற்றும் விரோதத்திற்கான வழிகளில் இருந்து நம்மை வெளியே கொண்டுவராத இரட்சிப்பு மெய்யானதல்ல - இது வெறும் மத இயக்கம் மற்றும் கலவரம். மனந்திரும்புதல் ஒரு பெரிய வாழ்க்கை மாற்றம். மனந்திரும்புதல் என்பது ஒரு வழிப் பாதையில் நாம் தவறாக சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வதாகும் . மனந்திரும்புதல் என்பது இயேசுவை நம் உதடுகளுக்கும், நம் வாழ்வுக்கும் ஆண்டவராக வைக்காமல், நம்முடைய வாழ்க்கையை சுயமாய் வழிநடத்த முயற்சிப்பது எப்போதும் ஏமாற்றத்திலும், பேரழிவிலும், மரணத்திலும் முடிவடையும் என்பதை ஒப்புக்கொள்வதாகும் . நம்முடைய பாவங்களுக்குப் ஜீவ பலியாக தம் குமாரனை அனுப்பிய பிதாவின் குணாதிசயத்தை பிரதிபலிக்கும் வகையில் நமது நடக்கையை மாற்றுவோம்! தேவனுடைய கிருபை வியக்கத்தக்கது என்பதை நாம் அறிவோம், ஆனால் அவருடைய சித்தம், கிருபை மற்றும் ஜீவனைக் கொடுக்கும் என்பதையும் அறிந்து கொள்வோம்.

என்னுடைய ஜெபம்

அன்பும் இரக்கமுமுள்ள தேவனே , நீர் என் கடந்தகால பாவங்களிலிருந்து என்னை இரட்சித்தீர் என்பதை நான் உணர்கிறேன், மேலும் கீழ்ப்படிதலுக்கு என்னை அழைப்பதன் மூலம் எதிர்கால பாவங்களின் விளைவுகளிலிருந்து என்னை இரட்சிக்க விரும்புகிறேன். நான் என் வாழ்க்கையை உம்முடைய சித்தத்திற்கு மாற்றியமைக்க தயவுசெய்து எனக்கு உதவியருளும் . தயவு செய்து உமது பரிசுத்த ஆவியால் என்னைப் பெலப்படுத்துங்கள், அதனால் நான் சோதனையை சகிக்கவும் இன்னுமாய் அதை எதிர்த்து நிற்கவும் , உமது பரிசுத்தத்தை பிரதிபலிக்கவும் என்னால் முடியும். என்னில் உமது இரட்சிப்பு மற்றும் குணாதிசியத்தை பிரதிபலிக்கும் கனியை உயிர்ப்பித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து