இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தீர்க்கதரிசியாகிய மீகாவானவர் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிறைந்து , தேவனின் எதிர்கால திட்டத்தை தரிசித்து , இஸ்ரேலின் மேய்ப்பராக மேசியாவின் சமூகம் இருக்கும் என்பதை எதிர்நோக்கினார் . நம் எதிர்காலத்தின் மேய்ப்பர் பெத்லகேமில் பிறந்தார் (மத்தேயு 2:1-6) இஸ்ரவேலின் மேய்ப்பனாகவும், இராஜாவாகவும் , மேசியாவாகவும் இருப்பார் . எங்கள் மேசியா, மேய்ப்பர் மற்றும் ஆண்டவராகிய இயேசு வந்திருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம்! எங்களுடைய நம்பிக்கையை அவரில் காண்கிறோம். அவரே எங்கள் நல்ல மேய்ப்பர் , அவர் நமக்காக ஒருநாளிலே திரும்பி வருவார் , நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைப்பார், நம்மை என்றென்றும் அவருடைய சமூகத்திலே பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பார் . அங்கு, அவருடைய பாதுகாப்புக் கவனிப்பிலும் நித்திய சமாதானத்திலும் பங்கடைவோம் . ஆண்டவரே, அந்த நாள் விரைவில் வருவதற்கு நீர் விரைந்து வாரும் !

என்னுடைய ஜெபம்

எங்கள் கர்த்தராகிய ஆண்டவரே, இயேசுவை என் பாவங்களுக்காக பலியிடப்படும் ஆட்டுக்குட்டியாகவும், உம்முடைய ஆடுகளின் நல்ல மேய்ப்பராகவும் அனுப்பியதற்காக நன்றி. உமது குமாரன் எனது மேய்ப்பனாகக் கொண்டு எனது நிகழ்காலம் மற்றும் எனது எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சமாதானம் , பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான வாக்குறுதிக்காக உமக்கு நன்றி. அவர் நாமத்தினாலே , நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து