இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இவ்வுலகத்தையும் அதில் உள்ள யாவையும் சிருஷ்டித்த தேவன் நம்மைப் பற்றியும், நம் தேவைகளைப் பற்றியும், வலிகளையும் , கவலைகளையும் மற்றும் அச்சங்களையும் விசாரிக்கிறவரானபடியால் அவை முற்றிலும் அற்புதமானது அல்லவா?! ஆகவே, அவர் நமக்குச் சிறந்ததைச் செய்வார் என்று நம்புவோம், அவருக்காக வாழ்வதன் மூலமும், அவரை நேசிப்பதன் மூலமும், நம் வாழ்க்கையில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற விரும்புவதன் மூலமும் அந்த நம்பிக்கையை இவ்வுலகிற்கு காண்பிப்போம் (ரோமர் 8:28-29).

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , சர்வவல்லமையுள்ள தேவனே, எனது கவலைகள், ஏக்கங்கள் , எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் அனைத்தையும் முழுமனதோடே உம் கரங்களில் ஒப்புவிக்கிறேன் . எனக்கும், இன்னுமாய் அடியேன் நேசிப்பவர்களுக்கும் சிறந்த காரியங்களை நீர் செய்வீர் என்று நம்பி, மற்றவர்கள் மீது சார்ந்திருக்காதபடி என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், அப்படி செய்ய எனக்கு பரிசுத்த ஆவியின் ஒத்தாசையைத் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே , இந்த வாக்குறுதிக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், மேலும் இந்த கிருபையைப் பெற உம்முடைய உதவியைக் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து