இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சரியானவற்றை செய்வது சில நேரங்களில் மிகவும் கடினம். நமக்கு அநீதி இழைத்த ஒருவரைப் பற்றி புறங்கூறுவது அல்லது அவர்களுக்கு உதவி தேவை என்று அறிந்து ஜெபத்தில் ஒரு குறிப்பை வைப்பது அல்லது பாடுபடுகிறதான ஒரு கிறிஸ்தவர்களைப் பற்றி தவறாக பேசுவது என்பது மிகவும் எளிதானது. ஆனால், கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் செயலினால் நாம் காயப்பட்டிருக்கும்போது நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் மட்டுமே சரியானது! அது என்னவென்றால் உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்தி ஒப்புரவாகும்படி முயற்சி செய்யவேண்டும் . இதுவே தேவனின் சித்தமாகும் , அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு இதுவே இலக்காக இருக்க வேண்டும்

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , என் புத்தியீனமான மற்றும் சுயநலமான வழிகளுக்காக மன்னியுங்கள். எனக்கு எதிராக பாவம் செய்தவர்களை அன்புடன் எதிர்கொள்ள எனக்கு தைரியம் கொடுங்கள், ஆனால் என்னால் ஒப்புரவு செய்ய முடியாவிட்டால், நீங்கள் என்னை மன்னித்தது போல் மன்னிக்க உமது பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்திலும், பாவநிவாரண பலியினாலும் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து