இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் இருதயங்களில் துன்மார்க்கத்தைக் தேக்கிவைக்கும்போது , ​​நம்மைப் பற்றிய நிஜ முகத்தை மக்கள் அறியாதபடி, எல்லா நேரங்களிலும் " முகத்தை சாதாரணமாக " நாம் தொடர்ந்து வைத்திருக்க கூடும் . ஆனால், நீதியே நமது நோக்கமாக இருந்தால், அந்த இலக்கை நேர்மையுடன் வாழ முயற்சிப்போம். நாம் துன்மார்க்கத்தை பின்பற்றும் போது - நாம் தடுமாறுகிறோம், பாவம் செய்கிறோம், துரோகம் செய்கிறோம் - நாம் தேவனை கனம் பண்ணுகிறவர்களாகவும் , நம் பாவத்திலிருந்து மனந்திரும்பவும் செய்வோம் . நாம் முகத்தை அப்பாவித்தனமாக வைத்து பாவம் செய்ய மாட்டோம் அல்லது நமது பாவத்தை நியாயப்படுத்த முயற்சிக்க மாட்டோம். நாம் மன்னிப்பு கேட்போம், நமது தவறுகள், பாவங்கள் மற்றும் பலவீனங்களிலிருந்து கற்றுக்கொள்வோம். நாம் குறைபாடுள்ளவர்களாக இருந்தாலும், தேவன் நம்மில் தம்முடைய கிரியையை முடிக்கவில்லை என்பதை நாம் அறிவோம், எனவே நாம் நம்மை ஆராய்ந்து, கிறிஸ்துவின் சாயலை நோக்கி முன்னேறுவோம்!

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே , அநேக முறை என்னை மன்னித்ததற்காக உமக்கு நன்றி. என் பாவத்தை மற்றவர்களிடமிருந்தும் உம்மிடமிருந்தும் மறைக்க முயற்சித்த நேரங்களுக்காக நான் வருந்துகிறேன். நான் நேர்மையான, நீதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருக்கும் கிருபையை எனக்கு வழங்குங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து