இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமது வாயின் வார்த்தைகள் எவ்வளவு முக்கியமானது? இது நம் இருதயத்தில் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது என்று இயேசுவானவர் கூறுகிறார் . நம் வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்தி அழிக்கும் அல்லது அவர்களை குணப்படுத்தி ஜீவனைக் கொண்டுவரும் என்று சாலமோனுடைய நீதிமொழிகளின் புத்தகம் மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்கிறது. நமக்குச் செவிசாய்ப்பவர்களுக்குப் பலனளிக்கும் விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கட்டளையிடுகிறார். இந்த வசனங்களின் மூலமாக , இந்த நாளுக்குரிய வார்த்தையிலுள்ள தாவீதின் ஜெபம் மிகவும் பொருத்தமானது. நம் வார்த்தைகளை கட்டுப்படுத்தவும், அதன் வல்லமையை பயன்படுத்தி ஆசீர்வதிக்கவும் தேவன் மாத்திரமே நமக்கு உதவி செய்ய முடியும். நம் இருதயத்தை பரிசுத்தப்படுத்தி , நம் வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி, நம் வார்த்தைகளை நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நன்மைக்காகப் பயன்படுத்துவதன் மூலமாக அவர்களை நம் உலகிற்கு அழைப்போமாக !

Thoughts on Today's Verse...

How important is our speech? Jesus said it revealed what was going on in our hearts. Proverbs repeatedly tells us that our words can wound and destroy or heal and bring life. The apostle Paul commands us to speak only what will benefit those who hear us. In light of these Scriptures, David's prayer in today's verse is very appropriate. Only God can help us tame our speech and use its power to bless. Let's invite him into our world of speech by purifying our hearts and taking control of what we say so we can use our speech for the good of those around us!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, என் வார்த்தைகள் உமக்கு துரோகம் செய்யவோ அல்லது பிறரை காயப்படுத்தவோ நான் விரும்பவில்லை. நான் என் வார்த்தைகளை மீட்டு, உம்மை மகிமைப்படுத்தவும், உமது பிள்ளைகளை ஆசீர்வதிக்கவும், உமது குமாரனை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் அறியாதவர்களுடன் இரட்சிப்பைப் பற்றி பேசவும் முயலும்போது எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy and righteous Father, I never want my language to betray you or wound others. Please help me as I seek to redeem my speech and use it to glorify you, bless your children, and speak of salvation with those who do not know your Son as their Savior and Lord. In the name of Jesus, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of சங்கீதம் - 141:3

கருத்து