இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் அறியேன் . நான் அறியேன் ! நாம் பயன்படுத்தக் கூடிய கடினமான சொற்றொடர்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேவனைப் பற்றியும் அவருடைய வழிகளைப் பற்றியும் சிந்திக்கும்போது, ​​உண்மையில் நாம் சொல்லக்கூடியது இது மாத்திரமே . தேவனைப் பற்றி நாம் அறிந்திருப்பது என்னவென்றால், அவர் அவரை அவருடைய கிருபையை கொண்டு நமக்கு வெளிப்படுத்த சித்தம் கொண்டிருக்கிறார் என்பதே. அவர் இரகசியங்களின் உறைவிடமாக இருக்கிறார் . அவர் உன்னதங்களில் அறியக்கூடியவர்,ஆனால் காணப்படாதவர். ஆயினும்கூட, அவரைப் பற்றி நாம் அறிந்தவை எவை , அவர் இயேசுவின் மூலமாய் நமக்கு வெளிப்படுத்தியவை யாவும் , வல்லமையுள்ளவை மற்றும் அற்புதமானவை மட்டுமல்ல, அன்பும் இரக்கமும் கொண்டவையாகும் .

Thoughts on Today's Verse...

I don't know. I don't know! That has to be one of the hardest phrases for us to use. But when thinking about God and his ways, that's really all we can say. What we know about God is only what he in his grace has chosen to reveal to us. He is the Mystery of mysteries. He is the supreme knowable Unknown. Yet what we do know of him, what he has revealed to us in Jesus, is not only mighty and awesome, but loving and merciful.

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய ஆண்டவரே, உம் சிருஷ்டிப்புகளையும், கிரியைகளையும் பார்த்து நான் ஆச்சரியமும் பிரமிப்பும் அடைகிறேன். இப்பிரபஞ்சத்தின் பரந்த தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, ​​​​நாங்கள் வாழும் சிறிய நீல கிரகம் நீர் வைத்த இடத்திலிருந்தே சுழல்கிறது. உம் அற்புதமான மற்றும் விஸ்தாரமான ராஜரீகமும், எல்லாவற்றையும் செய்கிற செயல்களையும் பார்த்து அடியேனை உமக்கு முன்பாக தாழ்த்துகிறேன்.அதே நேரத்தில், அப்பா , பிதாவே நீர் என்கூடவே இருப்பதை நான் பொக்கிஷமாக கருதுகிறேன். நீர் எனக்கு அறிந்த எல்லாவற்றுக்கும் மேலாக நல்லவர், எல்லைகளையும் காலத்தையும் கடந்தவர் , மேலும் எப்போதும் என்னோடிருக்கும் பிதாவாகிய தேவன் . உம்மை எப்பொழுதும் கிட்டிசேர முடியும் ஆனால் கடந்து செல்ல இயலாது , நீர் எப்பொழுதும் இருக்கிறவர் ஆனால் உம்மை ஒரே இடத்தில் வைக்க முடியாது, இப்படி நீர் இருப்பதினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்திலே உமக்கு நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன் . ஆமென்.

My Prayer...

To you, O Lord God, I can only offer my wonder and awe. When I consider the vastness of the universe in which our tiny blue planet spins its existence, I am humbled at your wonderfully complex and expansive soveriegnty. At the same time, Abba Father, I treasure your nearness. You are the good far above all I know, the God who transcends space and time, and also God my Father who is ever near. Thank you for being accessible but not penetrable, available but not controllable. I thank you and praise you in the name of Jesus. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of பிரசங்கி - 11:5

கருத்து