இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் இரண்டு காரியங்களை மறைமுகமாக நம்புகிறேன். 1)தேவனுடைய அதிகாரமும் வல்லமையும், 2) அவருடைய சந்நிதானத்திலே பங்குள்ளவனாய் இருப்பதை மிகுந்த சந்தோஷமாய் எண்ணுகிறேன். என் சிறந்த முயற்சி எப்பொழுதுமே முழுமையடையாது. என் எல்லா சிறந்த முயற்சியை பார்க்கிலும் தேவனுடைய கிருபை பெரிதும், வல்லமை நிறைந்ததுமாய் இருக்கிறது! அவருடைய கிருபையும் , இரக்கமும் மட்டுமே அடியேனை அவருடைய சமூகத்தில் குற்றமற்றவனாய் நிற்க தகுதியாக்குகிறது. நான் மகிமையிலே அவரை முகமுகமாய் தரிசிக்க எதிர்னோகிக்கொண்டு நன்றியுள்ள இருதயத்தோடே அவரை துதியாமல் இருப்பேனோ ?

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே, நீர் கிருபையுள்ளவர், நீர் மகிமைநிறைந்தவர், நீர் மாத்திரமே மெய்யான தேவன்! உம்முடைய வல்லமையின் ஆவியை கொண்டு என் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த காரியங்களுக்காக உம்மை துதிக்கிறேன் . தயவாய் என்னை பலப்படுத்தி, அரவணைப்பிலே வைத்துக்கொள்ளும். உம் மகிமையும் , கிருபையினால் மாத்திரமே என் இரட்சிப்பை குறித்து மிகவும் நம்பிக்கை உள்ளவனாய் இருக்கிறேன். அந்த மகிமையுள்ள சிங்காசனத்தின் முன்பாக நான் மிகுந்த சந்தோஷத்தோடே நிற்கும்படி உம்முடைய சித்தத்தை என்னிலே நிலைவரப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து